News March 28, 2024
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது

பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் இருவரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் கஃபேயில் மார்ச் 1ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், குண்டு வெடிப்பை நிகழ்த்தியவருடன் நேரடித் தொடர்பில் இருந்ததாக கருதப்படும் மேலும் இருவர் இன்று கைதாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News January 1, 2026
உங்கள் குழந்தையிடம் இந்த பழக்கம் இல்லையா?

குழந்தைகள் அடம்பிடிக்கும்போது நீங்கள் அவர்கள் மீது கோபப்பட்டிருப்பீர்கள். இது தவறு என தெரிந்தும் மன்னிப்பு கேட்காமல் அப்படியே கடந்தும் சென்றிருப்பீர்கள். இதை கவனிக்கும் உங்கள் குழந்தையும், தவறு செய்தால் மன்னிப்பு கேட்க மறுக்கின்றனர். எனவே, உங்கள் குழந்தையிடம் நீங்கள் முதலில் மன்னிப்பு கேட்டு பழகுங்கள். இதன்மூலம் மரியாதையையும், மன்னிப்பு கேட்கும் குணத்தையும் அவர்கள் எளிதில் கற்றுக்கொள்வர். SHARE.
News January 1, 2026
குளிர்காலத்தில் இட்லி மாவு புளிக்க நேரமாகுதா?

இட்லி மாவு புளித்தால் மட்டுமே இட்லி பஞ்சு போல மென்மையாக வரும். ஆனால், குளிர் காலத்தில் இட்லி மாவு விரைவாக புளிக்காது. மாவை புளிக்க வைக்க சில டிப்ஸ் இதோ! * மாவை கைகளால் கலக்கும் போது எளிதாக புளிக்கும் *அரிசி அரைக்கும் போது அதனுடன் அவல் அல்லது வடித்த சாதத்தை சேர்த்து அரைக்கவும் *மாவு அரைக்கும் போது சிறிது சூடான நீரை பயன்படுத்தலாம் *மாவு அரைத்த பிறகு அதில் கால் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்க்கலாம்.
News January 1, 2026
மகளிர் உரிமைத் தொகை.. மாற்றம் செய்தது தமிழக அரசு

மகளிர் உரிமைத் தொகை திட்ட இணையதளத்தில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. முன்னதாக, தகுதியில்லாத பெண்கள் இந்த திட்டத்தில் ₹1,000 பெற்று வந்தால் புகாரளிக்க <


