News November 29, 2024
48,000 புகைப்படங்களை தோற்கடித்த இரண்டு எலிகள்!

நீங்கள் மேலே பார்க்கும் புகைப்படம் இரண்டு எலிகள் சாதாரணமாக சண்டையிடுவது போல் தெரியும். ஆனால் இந்த புகைப்படம் தான் 2019ஆம் வனவிலங்கு புகைப்படக் கலைஞருக்கான LUMIX விருதை வென்றது. புகைப்படக் கலைஞர் சாம் ரவுலி லண்டனில் உள்ள சுரங்கப்பாதையில் எலிகள் சண்டையிடுவதை புகைப்படம் எடுத்தார். இப்போட்டியில் உலகளவில் இருந்து மொத்தம் 48,000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 26, 2025
மத்தியஸ்தம் செய்யத் தயார்.. ஈரான் அறிவிப்பு

இந்தியாவும், பாகிஸ்தானும் எங்களின் சகோதர நாடுகள் எனத் தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையீது அப்பாஸ் அராச்சி, இரு நாடுகளிடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்யத் தயார் என்றும் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் நிறுத்தம், அட்டாரி – வாகா எல்லை மூடல், தூதர்கள் வெளியேற்றம், துப்பாக்கிச்சூடு என இந்தியாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் போர் பதற்றம் நிலவுகிறது.
News April 26, 2025
இந்தியா, பாக். துப்பாக்கி சண்டை.. எல்லையில் பதற்றம்

இந்தியா, பாக். ராணுவம் இடையே எல்லையில் 2வது நாளாக துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. பஹல்காம் தாக்குதலை பாக். தீவிரவாதிகள் நடத்தியதாக இந்தியா சந்தேகிக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அச்சத்தில் உள்ள பாக், எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
News April 26, 2025
பாகிஸ்தானுடன் எத்தனை பார்டர் கிராஸிங் உள்ளன?

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நிலவுகிறது. உடனடியாக இந்திய அரசு, வாகா – அத்தாரி எல்லையை மூடி உத்தரவிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ரோட் பார்டர் கிராஸிங் உள்ளன. ➙வாகா எல்லை ➙கர்தர்பூர் எல்லை ➙கந்தா சிங் வாலா எல்லை ஆகியவை உள்ளன. இதில் கர்தர்பூர் எல்லை இன்னும் சீக்கியர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.