News March 18, 2024

ராமநாதபுரம் அருகே இருவர் கைது

image

ராமநாதபுரம் புது அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் மதியழகன். நிதி தணிக்கை உதவி இயக்குநராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.பூட்டிக் கிடந்த இவரது வீட்டில் 45 பவுன் நகை மார்ச் 8ல் திருடு போனது.இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் மோகன் (39), மதுரை காளவாசல், சம்மட்டிபுரம் மகேந்திரன் (33) ஆகியோரை பஜார் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Similar News

News July 6, 2025

ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டிகளில் தங்கும் அறைகள் – change photo

image

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை தங்கும் அறைகளாக மாற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரயில் போக்குவரத்திற்கு பயன்படாத ஐந்து ரயில் பெட்டிகள் பயன்படுத்த உள்ளனர். இதனை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் அடிப்படியில் விடப்பட உள்ளது. www.ireps.gov.in இணையதளம் வாயிலாக ஜூலை 15-ம் தேதிக்கான விண்ணப்பிக்க என ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

News July 6, 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 5ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜூலை 6 காலை 6 மணி வரை காவல்துறையின் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட போலீசாரின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, முதுகுளத்தூர், திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவசர நிலையில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News July 5, 2025

மதுரை – இராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்

image

இராமநாதபுரம் – இராமேஸ்வரம் இடையே பணிகளை நடைபெறுவதால், ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படுகிறது. வரும் 7ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, மதுரை – ராமேஸ்வரம் பயணியர் ரயில் ராமநாதபுரம் வரை மட்டும் இயங்கும். அதேபோல், புறப்படுவதும் ராமநாதபுரத்தில் இருந்து மட்டுமே இருக்கும். மேலும், சனி, ஞாயிறு மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் ரயில் ராமேஸ்வரம் வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

error: Content is protected !!