News May 25, 2024
கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற இருவர் கைது

IPL இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளை, கள்ளச் சந்தையில் விற்பனை செய்த இருவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் KKR-SRH அணிகள் மோதுகின்றன. அதற்கான டிக்கெட்டுகளை தாஹா அலி, ராஜ் திலக் ஆகியோர் கள்ளத்தனமாக விற்றுள்ளனர். அவர்களை கைது செய்த போலீசார், 18 டிக்கெட்டுகள், ₹42000ஐ பறிமுதல் செய்தனர். கள்ளச் சந்தையில் டிக்கெட் வாங்கி ஏமாறாதீர்.
Similar News
News March 3, 2026
இன்று சந்திர கிரகணம்: தம்பதியர் ஒன்று சேரலாமா!

சந்திர கிரகணத்துக்கு முன்பு 9 மணிநேரமும், கிரகணத்தின் போதும் பூமியின் சூழல் அசுத்தமாவதாக இந்துமத நம்பிக்கை கூறுகிறது. இந்நேரத்தில் பல்வேறு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. அவ்வகையில், தம்பதியர் உறவில் ஈடுபடுவதையும் கிரகணம் முடியும்வரை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், உறவில் ஈடுபடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
News March 3, 2026
காங்கிரஸ் கட்சியில் பிளவா? 13 MLA-க்கள் போர்க்கொடி

40 தொகுதிகளை காங்கிரஸ் கேட்கும் நிலையில் திமுகவோ 29 தொகுதிகளை கொடுக்க மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. இதனிடையே தவெகவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் ஹைதராபாத்தில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தவெகவுடன் காங்., பேச்சுவார்த்தை நடத்துவதை அறிந்து, 13 MLA-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தவெகவுடன் கூட்டணி அமைத்தால் கட்சியில் இருந்து விலகுவோம் என எச்சரித்துள்ளனர்.
News March 3, 2026
முட்டை விலை மளமளவென குறைந்தது

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மளமளவென சரிந்து வருகிறது. போர் பதற்றம் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டு முட்டைகள் தேக்கம் அடைந்திருப்பதே விலை சரிவுக்கு காரணம். கடந்த 1 வாரத்தில் மட்டும் சுமார் 1 ரூபாய் வரை விலை குறைந்து ₹4.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், சில்லறை விற்பனையிலும் முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளது. உங்க ஏரியாவில் 1 முட்டையின் விலை எவ்வளவு?


