News October 12, 2025
இறந்தோரை வைத்து TVK அற்ப அரசியல் செய்கிறது: RS பாரதி

இறந்தோரை வைத்து தவெகவும், அதிமுகவும் அற்ப அரசியல் செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். முறைகேடாக கையெழுத்து பெற்றும், பணத்தாசை காட்டியும் CBI விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சாடியுள்ளார். மேலும் அரசியல் லாபத்திற்காக தவெகவும், அதிமுகவும் நீதிமன்றத்தையும், தமிழக மக்களையும் ஏமாற்றுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News October 12, 2025
மழைக்காலத்தில் சாப்பிட ‘ருசியான ஸ்நாக்ஸ்’

கையில் டீ, மழைத் துளிகளின் ஓசை, மெல்லிய இசை, மனதுக்கு அமைதியை கொடுக்கும் மண்வாசனை என மழைக்காலத்தின் மாலை வேளைக்கு இணை எதுவும் இல்லை. அழகான மாலை வேளைக்கு, மேலும் அழகை கொடுப்பது நம் கையில் வைத்திருக்கும் ஸ்நாக்ஸ் தான். மழைக்காலத்தில் என்னென்ன ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என்று மேலே உள்ள புகைப்படங்களில் காணலாம். உங்களுக்கு பிடித்தது எது என்று கமெண்ட் செய்யுங்கள்.
News October 12, 2025
பரப்புரை பயணத்தை தொடங்கிய நயினார்

2026 தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணத்தை நாயினார் நாகேந்திரன் மதுரையில் தொடங்கினர். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
News October 12, 2025
கரூர் துயரம்: பணத்துக்காக CBI விசாரணையா?

கரூர் துயரில் உயிரிழந்த 10 வயது சிறுவனின் தந்தை CBI விசாரணை கோரி SC-ல் மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால், குழந்தை பிறந்த ஒரே ஆண்டில் தன்னை விட்டுச் சென்ற கணவர், பணத்திற்காகவே வழக்கு போட்டுள்ளதாக, சிறுவனின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மகனின் வயதை கூட 13 என தவறாக குறிப்பிட்டுள்ளதாக கூறிய அவர், இறுதிச் சடங்கிற்கு கூட வரவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.