News January 23, 2025
டங்ஸ்டன் சுரங்கம்: கடந்து வந்த பாதை

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்ததாக, 2024 நவம்பரில் மத்திய அரசு அறிவித்தது. இதனால், பல்லுயிர் பாரம்பரிய தலங்கள் அழிய வாய்ப்புள்ளதாக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். TN அரசும் கடந்த டிச.9ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. நேற்று மதுரை மக்கள் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசிய நிலையில், இன்று ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News October 16, 2025
திமுக + காங்., கூட்டணி: டெல்லி மேலிடம் எடுத்த முடிவு

ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் அடம்பிடித்து வரும் நிலையில், 4 அமைச்சர் பதவி நிபந்தனையுடன் கூட்டணி அமைக்க காங்., டெல்லி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஹார் தேர்தல் முடிந்ததும் ராகுல் காந்தி, தமிழகத்தில் நேரடியாக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளாராம். அவரது தலைமையில் வரும் ஜனவரியில், 3 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
News October 16, 2025
2026 தேர்தலில் விஜய்: ரகசிய கருத்துக்கணிப்பு வெளியானது

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து நின்றாலும் 23% வாக்குகளை கைப்பற்றும் என திமுக நடத்திய ரகசிய சர்வேயில் தெரியவந்துள்ளதாக The Print தெரிவித்துள்ளது. கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்புகளுக்கு பின்பும், மக்களிடம் விஜய்யின் செல்வாக்கு குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 1,245 பேர் என மொத்தம் 2.91 லட்சம் பேரிடம் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
ஏன் மூன்று முறை ஆரத்தி காட்டுகிறோம் என தெரியுமா?

பொதுவாக கடவுளை வழிபடும் போது, 3 முறை கற்பூர ஆரத்தி காட்டுவோம். அது, கடவுளின் 3 நிலைகளை குறிக்கிறது. அதாவது, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. அதே நேரத்தில் இதற்கு வெவ்வேறு அர்த்தங்களும் உண்டு. முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் அல்லது 3 காலங்களான இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் போன்றவற்றையும் குறிக்கிறது எனவும் கூறப்படுகிறது. SHARE IT.