News April 24, 2024
மீண்டும் இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவியை இணைக்க முயற்சி

அதிமுகவை (இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி) மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா இறங்கியுள்ளார். தேர்தல் வரை அமைதியாக இருந்த சசிகலா, தற்போது “உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள்” என்ற எம்ஜிஆரின் மேற்கொளைக் குறிப்பிட்டு, தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள படிவத்தில் பெயர், முகவரி, ஆதார் எண், மாவட்டம், சட்டமன்றத் தொகுதி, பொறுப்பு போன்றவற்றை குறிப்பிடவும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News January 12, 2026
உங்கள் சகோதரனாக நான் இருக்கிறேன்: CM ஸ்டாலின்

கடலும் நாடுகளும் நம்மை பிரித்தாலும் மொழியும் இனமும் நம்மை இணைக்கின்றன என அயலக தமிழர்கள் தின விழாவில் CM ஸ்டாலின் பேசியுள்ளார். கீழடி, சிவகளை உள்ளிட்ட அகழாய்வுகள் மூலம் தமிழர்களின் தொன்மையை உலகமே அறிந்துள்ளதாக கூறிய அவர், திமுக அரசு இந்த வரலாற்று கடமையை செய்துகாட்டி இருப்பதாக கூறினார். மேலும், உங்களுக்காக (அயலக தமிழர்களுக்காக) தமிழகத்தில் இந்த சகோதரன் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
News January 12, 2026
FLASH: தொடர் சரிவால் தடுமாறும் இந்திய சந்தைகள்!

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 715 புள்ளிகள் சரிந்து 82,861 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 210 புள்ளிகள் சரிந்து 25,473 புள்ளிகளாகவும் வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்தமுள்ள 4,252 நிறுவனங்களில் 3,189 நிறுவன பங்குகள் இச்சரிவை சந்தித்ததால், ₹6 லட்சம் கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புத்தாண்டு அன்று 85,451-ஆக இருந்த சென்செக்ஸ் தற்போது 2,600 புள்ளிகள் சரிந்துள்ளது.
News January 12, 2026
இவர் தூய்மை பணியாளர் மட்டுமில்ல.. தூய்மையானவர்!

மனித மனம் எப்போதும் தடுமாறக்கூடியதே. ஆனால், சென்னையை சேர்ந்த பத்மா, தன் வேலையை போலவே மனதளவிலும் தூய்மையானவராகவே உள்ளார். சென்னை தி.நகரில் அவர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போது, 45 சவரன் தங்க நகைகள் கிடைத்துள்ளன. உடனே, அதனை அவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். சுமார் ₹48 லட்சம் மதிப்பிலான நகைகளை தவறவிட்ட ரமேஷ் என்பவரிடம் நகை ஒப்படைக்கப்பட, பத்மாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. Salute மேடம்!


