News October 10, 2025
TN போலீஸ் விசாரணையில் உண்மை வெளிவராது: தவெக

TN போலீஸை மட்டுமே வைத்து அமைக்கப்பட்டுள்ள SIT மூலம் உண்மை வெளிவராது என SC-யில் தவெக கூறியுள்ளது. SIT விசாரணையை எதிர்க்கவில்லை என வாதாடிய தவெக தரப்பு, காவல்துறை அதிகாரிகளை மட்டுமே வைத்து SIT அமைத்ததை எதிர்க்கிறோம் என தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், கரூர் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
Similar News
News October 10, 2025
பள்ளி மாணவர்களுக்கு மாதம் ₹1,500.. நாளை ரெடியா இருங்க

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ₹1,500 வழங்கும் திறனறித் தேர்வு நாளை நடைபெறவுள்ளது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில் இருந்தும் 2,70,508 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாநிலம் முழுவதும் 950 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இதில், தேர்வு செய்யப்படும் 1,500 மாணவர்களுக்கு, பள்ளி கல்வி இயக்ககம் மூலம் 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ₹1,500 வழங்கப்பட உள்ளது. தேர்வெழுதும் மாணவர்களுக்கு லைக் போட்டு வாழ்த்து கூறுங்கள்!
News October 10, 2025
விஜய் தாமதமாக வந்ததே அனைத்திற்கும் காரணம்: அரசு

கரூர் துயரம் தொடர்பாக SC-ல் தவெக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக TN அரசு தரப்பு வாதிட்டுள்ளது. விஜய் தாமதமாக வந்ததே எல்லாவற்றிற்கும் காரணம் என குற்றஞ்சாட்டிய TN அரசு, SIT விசாரணை முறையாக நடைபெறுவதால் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது. SIT அதிகாரிகள் ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்டனர், அரசு நியமிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
News October 10, 2025
வாயை சுற்றி கருப்பா இருக்கா? TIPS

வாயை சுற்றி கருப்பாக இருப்பதால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறதா? இதனை ஈசியா சரி செய்யலாம். இதற்கு, எலுமிச்சை பழத்தை வெட்டி 2 நிமிடங்கள் வாயை சுற்றி தேய்க்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், இறந்த செல்கள் நீங்கி சருமத்தில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள். எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் கருமையை நீக்க உதவும் என டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த TIPS பலருக்கும் உதவும் என்பதால் SHARE பண்ணுங்க.