News May 18, 2024
தொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் முயற்சி

மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளைக் கட்டுப்படுத்த இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) விதிகளைக் கடுமையாக்கியுள்ளது. இது தொடர்பான விரிவான அறிவிப்பு வரும் மாதங்களில் வெளியாகும் என அறிவித்துள்ளது. ஏற்கெனவே விளம்பர அழைப்புகளுக்கு 160 சீரிஸ் கொண்ட எண் ஒதுக்கப்பட்டுள்ளதைப் போல, சேவை சார்ந்த அழைப்புகளுக்கு 140 சீரிஸில் தொடங்கும் எண்களை ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
மல்லை சத்யா மதிமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்

கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைகோ அறிவித்துள்ளார். 15 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்கவும் கெடு விதித்துள்ளார். துரை வைகோ – சத்யா இடையே முரண்பாடு எழுந்தபோது, சத்யாவை ‘துரோகி’ என வைகோ குறிப்பிட்டார். இதற்கு எதிராக அவர் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
News August 20, 2025
பொது அறிவு வினா- விடை

1. காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ?
2. இஸ்ரோ எப்போது நிறுவப்பட்டது?
3. தமிழகத்தில் வெற்றிலைக்கு புகழ் பெயர் ஊர்?
4. பிஹு எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
5. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு 21 வயதிலேயே கேப்டனானவர் யார்?
சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க.. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியிடப்படும்.
News August 20, 2025
தவெக மாநாடு: விஜய் ரசிகர் மரணம்

தவெகவின் 2-வது மாநாடு நாளை மதுரையில் நடக்கவிருக்கும் நிலையில், கட்சி தொண்டர்கள் பல இடங்களிலும் பேனர் வைத்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த இனாம் கரிசல்குளம் என்ற கிராமத்தில் பேனர் வைக்க முயன்ற காளீஸ்வரன்(19) இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இவர், தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.