News March 17, 2024

ரூ.1,397 கோடி நன்கொடை பெற்ற திரிணாமுல்

image

தேர்தல் பத்திரங்கள் மூலம் 2வது அதிகபட்சமாக திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,397 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதற்கடுத்து, காங்கிரஸ் கட்சி 3வது அதிகபட்சமாக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,334 கோடி நன்கொடை பெற்றுள்ளது. 4ஆவது அதிகபட்சமாக சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி ரூ.1,332 கோடி பெற்றுள்ளது. பிஜேடி ரூ.944 கோடியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.442 கோடியும், டிடிபி ரூ.181 கோடியும் பெற்றுள்ளன.

Similar News

News August 7, 2025

ஆம்ஸ்டராங் வழக்கு: குண்டர் சட்டம் 17 பேருக்கு ரத்து

image

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டு அதில் 26 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இவர்களில் 17 பேர் தங்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி HC-ல் மனு அளித்தனர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் இதே காரணம் கொண்டு அவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்றார்.

News August 7, 2025

யூட்யூப் காட்டி சோறு ஊட்டும் பெற்றோரா?

image

யூடியூப் காட்டித்தான் இன்று குழந்தைகளை வளர்க்கவே செய்கிறோம். துள்ளல் பாடல்கள், கார்ட்டூன் என வீட்டில் மட்டுமல்லாது, பொது இடங்களிலும் குழந்தைகளிடம் செல்போனை கொடுத்துவிடுகிறோம். இதனால் சிறுவயதிலேயே கண் பிரச்னைகள், தூக்கமின்மை, மன உளைச்சல் வரை ஏற்படுகின்றன. இப்படி பழக்கினால் குழந்தைகளை போனிடமிருந்து மீட்கவே முடியாது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் எப்படி?

News August 7, 2025

இந்திரா காந்தியை ஃபாலோ பண்ணுங்க: மோடிக்கு அட்வைஸ்

image

இந்தியா மீது அமெரிக்கா இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்தியுள்ளதற்கு, மோடியை காங்., தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். 2019 ‘ஹவ்டி மோடி’ முதல் பாக்., போர்நிறுத்தம் வரை டிரம்ப்புக்கு மோடி ஆதரவளித்தார். ஆனால், வரிவிதிப்பின் மூலம் மோடியின் தோல்வி வெளிப்பட்டுள்ளது என்ற அவர், மோடி தன் ஈகோவை ஒதுக்கிவிட்டு, இந்திரா காந்தியை முன்மாதிரியாக கொண்டு நம் வெளிநாட்டுக் கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்றார்.

error: Content is protected !!