News March 17, 2024
ரூ.1,397 கோடி நன்கொடை பெற்ற திரிணாமுல்

தேர்தல் பத்திரங்கள் மூலம் 2வது அதிகபட்சமாக திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,397 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதற்கடுத்து, காங்கிரஸ் கட்சி 3வது அதிகபட்சமாக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,334 கோடி நன்கொடை பெற்றுள்ளது. 4ஆவது அதிகபட்சமாக சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி ரூ.1,332 கோடி பெற்றுள்ளது. பிஜேடி ரூ.944 கோடியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.442 கோடியும், டிடிபி ரூ.181 கோடியும் பெற்றுள்ளன.
Similar News
News December 29, 2025
யாராவது கீழே விழுவதை பார்த்தால் சிரிப்பு வருவது ஏன்?

ஒருவர் கீழே விழுவதை பார்த்ததும் பல சமயங்களில் நமக்கு சிரிப்பு வந்திருக்கும். இதற்கு நமது மூளையில் உள்ள மிரர் நியூரான்கள்தான் காரணமாம். அதாவது, ஒருவர் கீழே விழும்போது, நாமே விழுவது போன்ற ஒரு பிரம்மையை இந்த மிரர் நியூரான்கள் ஏற்படுத்துமாம். அப்போது உடம்பில் கிச்சுகிச்சு மூட்டுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதால் சிரிப்பு வருவதாக அறிவியல் சொல்கிறது. 99% பேருக்கு தெரியாத இத்தகவலை SHARE பண்ணுங்க.
News December 29, 2025
நகை கடன்.. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

தங்கத்தின் நிச்சயமற்ற தன்மை காரணமாக வங்கிகள் <<18695058>>நகை கடன் மதிப்பை குறைத்துள்ளன<<>>. இந்நிலையில், அதிக தொகையுடன் குறைவான வட்டியில் நகை கடன் பெற வழி உள்ளது. உங்களிடம் விவசாய நிலத்திற்கான பட்டா இருந்தால், விவசாய நகை கடன் பெற முடியும். இதில், அடகு வைக்கப்படும் நகையின் மதிப்பில் 85% வரை பணம் பெறலாம். மேலும், 7% வரையே வட்டி விகிதம் இருக்கும். அதிக கடன் தேவைப்படுபவர்களுக்கு இது உதவியாக இருக்கும். SHARE IT.
News December 29, 2025
TN-ல் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ₹5 லட்சம் கடன்: தமிழிசை

தமிழக அரசு வாங்கிய கடனுக்காக மட்டும் ஆண்டுக்கு ₹65,000 கோடி வட்டியாக செலுத்தப்பட்டு வருவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் ₹1,27,000 கடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பெண்களுக்கு மாதம் ₹1,000 ரூபாய் கொடுத்துவிட்டு, தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ₹5 லட்சம் கடனை திமுக அரசு ஏற்றி வைத்துள்ளதாகவும் தமிழிசை சாடியுள்ளார்.


