News June 26, 2024
திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி

மக்களவை சபாநாயகர் தேர்தலுக்கு INDIA கூட்டணி வேட்பாளரை அறிவிப்பதற்கு முன் தங்களிடம் கருத்து கேட்கவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. அக்கூட்டணியின் சார்பாக சபாநாயகர் தேர்தலுக்கு கொடிக்குன்னில் சுரேஷ் போட்டியிட்டார். இதுகுறித்து அறிவிப்பதற்கு முன் காங்கிரஸ் ஆலோசிக்கவில்லை என்று கூறியிருக்கும் TMC, ஆனாலும் சுரேஷுக்கு ஆதரவளித்ததாக தெரிவித்துள்ளது.
Similar News
News October 23, 2025
வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைய இப்படி விளக்கேற்றுங்கள்!

சூரியன் மறைவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் விளக்கு ஏற்றுவது நல்லது. லட்சுமி தேவிக்காக விளக்கை வடக்கு திசையில் ஏற்றி வைக்க வேண்டும். அங்கே செருப்பு இருக்கக் கூடாது. விளக்கை நன்றாக சுத்தம் செய்து விட்டே விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கில் கரி படிந்திருந்தால், அதை மாற்ற வேண்டும். விளக்கு ஏற்றியவுடன் கதவை மூடக்கூடாது. வீட்டிற்குள் வரும் நல்ல சக்திகள் வெளியே தங்கிவிடும் என்பது ஐதீகம். SHARE IT.
News October 23, 2025
பள்ளிகளுக்கு விடுமுறையா? கலெக்டர் புதிய அறிவிப்பு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(அக்.23) காலையில் மழை தொடரும் என IMD தெரிவித்துள்ளது. இதனிடையே, மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் இயங்கும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
News October 23, 2025
BREAKING: கட்சியில் இருந்து விலகினார்

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், மறைந்த MLA EVKS இளங்கோவனின் நெருங்கிய நண்பருமான நாசே ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் கடலூர் (அ) மயிலாடுதுறை தொகுதிகளில் போட்டியிட விரும்பிய அவருக்கு சீட்டு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார். ஈரோட்டில் செல்வாக்கு மிகுந்தவர் என்பதால் அதிமுக, பாஜகவினர் தங்கள் கட்சியில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.


