News August 4, 2024
சீமானுக்கு திருச்சி எஸ்பி நோட்டீஸ்

காவல்துறையினரை தகாத வார்த்தையால் திட்டியதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளை கண்டித்து, சென்னையில் நாம் தமிழர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது காவல்துறையினரை அவதூறாக பேசியதாக கூறி திருச்சி எஸ்பி வருண்குமார் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Similar News
News March 20, 2026
உறுதியாக ‘NO’ சொன்ன இபிஎஸ்

பாஜக, தவெகவுடன் கூட்டணி பேசவில்லை என இருதரப்பினரும் மறுத்தாலும், திரைமறைவில் பேச்சு நடந்ததாக கூறப்படுகிறது. திமுகவை எப்படியாவது வீழ்த்திட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டதாம். ஆனால், விஜய்க்கு கொஞ்சம் இடம்கொடுத்தாலும், நீண்டகால அடிப்படையில் அதிமுகவுக்கு பாதகமாகிவிடும் என்பதால் EPS அதை உறுதியாக மறுத்துவிட்டாராம். புதிதாக இன்னொருவரை ஏன் வளர்த்துவிட வேண்டும் ன அவர் நினைக்கிறாராம். உங்க கருத்து?
News March 20, 2026
WhatsApp-ல் வரும் புது அப்டேட்..

WhatsApp தனது யூஸர்களுக்கு தெளிவான Calling அனுபவத்தை தர புதிய Noise Cancellation வசதியை கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. Advanced Audio Processing டெக்னாலஜி மூலம், நெரிசலான இடங்களில் இருந்து நீங்கள் பேசினாலும், உங்களின் குரல் மட்டும் மறுமுனையில் இருப்பவருக்கு கேட்குமாம். உங்கள் குரலை தவிர்த்து, வாகனங்களின் சத்தம், காற்றின் இரைச்சல், மற்றவர்கள் பேசும் சத்தம் போன்றவை தானாக நீக்கப்படுமாம்.
News March 20, 2026
திமுக ஒரு மனிதகுல விரோதி: சீமான்

தன் முதுகிலேயே ஸ்டாலின் ஒரு டெல்லியை (காங்.,) வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார் என சீமான் சாடியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், GST, NEET உள்ளிட்ட காங்., பிரசவித்த பிரச்னைகளுக்கு மோடி பூஸ்ட் கொடுத்து வளர்க்கிறார் என்று விமர்சித்துள்ளார். எனவே பாஜகவை விமர்சிப்பதற்காக காங்.,ஐ திமுக புனிதப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும், காங்., தமிழின விரோதி என்றால் திமுக மனிதகுல விரோதி என குறிப்பிட்டார்.


