News March 18, 2024
பயணிகளுக்கு திருச்சி ரயில்வே அறிவுரை!

திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் ரயில் பயணிகளின் நலன் கருதி இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ரயிலில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் இளைஞர்கள் படியில் தொங்கிக்கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது.இது போன்ற நேரங்களில் அடுத்து வரும் ரயிலில் பயணிக்க அறிவுறுத்தியுள்ளது.மேலும் இது போன்ற செயல்களை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 7, 2026
திருச்சி: பொங்கல் கலை விழா நிகழ்சிகள் அறிவிப்பு

திருச்சி மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில், பொங்கல் கலை விழா நிகழ்ச்சிகள் வரும் 15, 16 ஆகிய தேதிகளில், தென்னூர் உழவர் சந்தை திடலில் நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகள் குறித்த பணிகள் மேற்கொள்வதற்கும், மேலும் விபரங்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் சிவஞானவதியை (எண்:9486152007) தொடர்பு கொள்ளலாம் எனவும் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையிடலாம் எனவும் ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
திருச்சி: அஞ்சல் சேவைகள் குறித்த பயிற்சி பட்டறை

திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு, அஞ்சல் சேமிப்பு வங்கி திட்டங்கள் மற்றும் அஞ்சல் மூலம் வழங்கப்படும் பிற குடிமக்கள் மைய சேவைகள் குறித்த பயிற்சி பட்டறை, கோட்ட ரயில்வே அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ரயில்வே மற்றும் அஞ்சல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு ஊழியர்களுக்கு பயிற்சியளித்தனர்.
News January 7, 2026
திருச்சி: குழந்தை வரம் அருளும் அம்மன்

திருச்சி மாவட்டம், துறையூரில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் வழிபாடு நடத்தினால் வாழ்வில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருகும் என்றும், சுகப்பிரசவத்துடன் கூடிய குழந்தை வரம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.!


