News March 18, 2024
பயணிகளுக்கு திருச்சி ரயில்வே அறிவுரை!

திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் ரயில் பயணிகளின் நலன் கருதி இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ரயிலில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் இளைஞர்கள் படியில் தொங்கிக்கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது.இது போன்ற நேரங்களில் அடுத்து வரும் ரயிலில் பயணிக்க அறிவுறுத்தியுள்ளது.மேலும் இது போன்ற செயல்களை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 28, 2025
திருச்சி மக்கள் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பு!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு விழா வரும் 30-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, டிச.29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை போக்குவரத்து சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், ஸ்ரீரங்கம் வழியாக சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என்றும், மேலும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் ஓடத்துறை, ஓயாமரி வழியாகச் செல்ல வேண்டும் என திருச்சி போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
News December 28, 2025
திருச்சி: அதிவேகமாக வந்த வாகனம் மோதி ஒருவர் பலி!

இனாம்குளத்தூர் அடுத்த மேல அம்மாபேட்டையை சேர்ந்தவர் மாணிக்கம் (55). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மணப்பாறைக்கு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். திருச்சி- திண்டுக்கல் சாலையை கடக்க முயன்றபோது திருச்சி நோக்கி வேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இனாம்குளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 28, 2025
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் செஸ் பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், சிறார் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியாக குழந்தைகளுக்கான வாராந்தர செஸ் பயிற்சி நாளை (டிச.28) காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை நடைபெற உள்ளது. விருது பெற்ற செஸ் பயிற்சியாளர் சங்கரா பயிற்சி அளிக்க உள்ளார். இதில், குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.


