News March 17, 2024
திருச்சி மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் அரக்குழாயில் மண் துகள்கள் மூலம் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை சரி செய்ய 2 மாத காலம் தேவைப்படுவதால் இந்த ஏரியாவை சுற்றியுள்ள 35 நீர் தேக்க மேல்நிலைத் தொட்டிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.
Similar News
News July 5, 2025
ஸ்ரீரங்கம் பெருமாள் தரிசனம் இல்லை

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஜூலை 8-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மூலவர் பெரிய பெருமாளுக்கு ஜேஸ்டாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, அன்று முழுவதும் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்ய இயலாது. மேலும், 9-ம் தேதி திருப்பாவாடை முன்னிட்டு மதியம் 3 மணிக்கு மேல் தான் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்ய இயலும் என கோயில் நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 5, 2025
திருச்சி: ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட விபரீதம்

வடக்கு காட்டூர் பகுதியை சேர்ந்த கிஷோர் குமார் (32) சேல்ஸ்மேன் ஆக பணிபுரிந்து வந்தார். இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் அதிக பணம் இழந்ததால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News July 5, 2025
திருச்சி: 12th போதும், ரூ.81,000 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள் <