News March 16, 2024

திருச்சி: குட்கா விற்ற 3 பேர் கைது 

image

திருவெறும்பூர் பள்ளி அருகே நேற்று அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை விற்றதாக பென்னி சேவியர், முருகேசன், ஜான் தனபால் ஆகிய 3 பேரை திருச்சி எஸ்.பியின் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு பயன்படுத்திய 1 கார்,12 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர். இன்று இவர்களை திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News

News November 13, 2025

திருச்சி: பசுமை பாரதம் நிறுவனத்தில் வேலை

image

திருச்சி மாநகரில் அமைந்துள்ள ‘PASUMAI BHARATHAM AGRI SOLUTIONS’ நிறுவனத்தில் காலியாக உள்ள FIELD OFFICER பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்த, 21-30 வயதுக்குட்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து, வரும் நவ.26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News November 13, 2025

திருச்சி: BILLA MONEY நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

image

திருச்சி மாநகரில் அமைந்துள்ள பிரபல டிரேடிங் நிறுவனமான BILLA MONEY-யில் காலியாக உள்ள MARKETING EXECUTIVE / TELE CALLER பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் டிகிரி முடித்த, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்/பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.8,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, வரும் நவ.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News November 13, 2025

திருச்சி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!