News March 17, 2024
திருச்சி: தேர்தல் பணிக்காக 2118 காவலர்கள்.!

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 8 காவல்துறை காவல் கண்காணிப்பாளர்கள்,36 காவல் ஆய்வாளர்கள், 263 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1424 காவல் ஆளிநர்கள்,383 ஊர்காவல் படையினர் என மொத்தம் 2118 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர், என்றார்.
Similar News
News November 20, 2025
ஶ்ரீரங்கம் கோவிலில் வேலை வாய்ப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இளநிலை உதவியாளர் பதவிக்கான 10 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கு வரும் நவ.25ஆம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம். மேலும் விவரங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் <
News November 20, 2025
திருச்சி மாவட்ட போலீசார் அதிரடி

திருச்சி சமயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எஸ்.ஆர்.எம். மருத்துவமனை அருகே 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தொடர்ந்து குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், நேற்று மங்கிலால் என்பவரும் திருச்சி எஸ்.பி பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
News November 20, 2025
திருச்சி: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – புகார்

தென்காசியை சேர்ந்த திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் பிரதமர் மோடி குறித்து பொது வெளியில் அநாகரிகமாக கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறியும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருச்சி மாவட்டத் தலைவர் லெனின் பாண்டியன் தலைமையில், திருச்சி கன்ட்டோன்மென்ட் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.


