News October 5, 2025
சசிகலா வீட்டில் நள்ளிரவில் அத்துமீறல்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள VK சசிகலா வீட்டில் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அத்துமீறி நுழைந்த நபரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, விஜய் வீட்டின் மொட்டை மாடியில் மர்ம நபர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரை விசாரித்ததில், 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தது தெரிய வந்தது.
Similar News
News October 5, 2025
பாஜகவின் பி டீம் தேர்தல் ஆணையம்: காங்கிரஸ்

பாஜகவின் உத்தரவின் பேரிலேயே சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டதாக காங்கிரஸ் MP ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். பிஹாரில் ஒரு வீட்டில் 247 வாக்காளர்களின் பெயர் எப்படி வந்தது என ECI விளக்க வேண்டும் எனவும், இறுதி வாக்காளர் பட்டியலில் இவ்வளவு முறைகேடுகள் எப்படி நடந்தது என்றும் அவர் கேட்டுள்ளார். ECI பாஜகவின் பி டீம் போல் செயல்படுவதாகவும் சாடியுள்ளார்.
News October 5, 2025
மூலிகை: சூப்பர் மருத்துவ குணங்களை கொண்ட சுக்கு!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, *சுக்குடன், தனியா சேர்த்து அரைத்து உண்டால், அதிக மதுவால் ஏற்பட்ட போதை குறையும்*சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி போய்விடும் *சுக்குடன், ஒரு வெற்றிலையை சேர்த்து மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும் *சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை ஆகியவற்றில் கஷாயம் செய்து பருகினால், சளி குறையும். SHARE.
News October 5, 2025
மேடையில் எமோஷனலான மோகன்லால்

நான் செல்லும் பாதையில் எனக்கு சந்தேகம் வரும்போதெல்லாம் ரசிகர்களின் ‘லாலேட்டா’ என்ற குரல் தனக்கு வழிகாட்டுவதாக மோகன்லால் கூறியுள்ளார். ’தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற மோகன்லாலுக்கு கேரள அரசு விழா எடுத்தது. அதில் பேசிய அவர், இந்த அங்கீகாரம் தனக்கு மிகவும் முக்கியம் என கூறினார். மேலும், டெல்லியில் விருதை பெறும்போது எனக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ அதைவிட எமோஷனலாக உணர்வதாகவும் தெரிவித்தார்.