News February 27, 2025
தீண்டாமையை கடைபிடிக்கும் மரங்கள்

காடுகளில் வளரும் சிலவகை மரங்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இதனை ஆங்கிலத்தில் ‘Crown Shyness’ என்று அழைக்கின்றனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, அருகில் இருக்கும் மரத்திற்கு கிடைக்கும் சூரிய ஒளியை மறைத்துவிடக் கூடாது என்பதற்காக மரங்கள் இந்த முறையை கடைபிடிப்பதாக சொல்லப்படுகிறது. நீங்கள் இதை நோட் பண்ணியிருக்கீங்களா?
Similar News
News February 28, 2025
TNSET தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

மாநில தகுதித் தேர்வு (TNSET) மார்ச் 6, 7, 8 ஆகிய தேதிகளில் கணினி (CBT) வழியில் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் trb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கு நெட் (NET) அல்லது செட் (SET) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். செட் எனப்படும் மாநில அளவிலான தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.
News February 28, 2025
தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.1,755 கோடி செலவிட்ட பாஜக

2023-24 பொதுத் தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக ரூ.1,755 கோடி செலவிட்டதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ரூ.619 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.107 கோடியை செலவிட்டு இருப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதேபோல், பாஜக, காங்கிரஸ், சிபிஎம், ஆம் ஆத்மி உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளுக்கு ரூ. 2669.86 நன்கொடை கிடைத்து இருப்பதாகவும் கூறியுள்ளது.
News February 28, 2025
பள்ளிகளில் சாதிப்பெயர் நீக்கம்.. அரசுக்கு ஐகோர்ட் கெடு

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், சாதிப்பெயர்களை நீக்குவது தொடர்பான நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிப்பதில் என்ன தயக்கம்? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.