News October 23, 2025

மரங்கள் ஒன்றோடு ஒன்று பேசும்; எப்படி தெரியுமா?

image

மரத்தின் வேர்கள் mycorrhizal பூஞ்சைகள் மூலம் பூமியின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு மரத்தின் இலையை பூச்சிகள் சாப்பிட்டு அழித்தால், மரத்தின் வேரில் இருந்து ரசாயன சிக்னல்கள் வெளியேறும். பூஞ்சைகள் இந்த சிக்னலை மற்ற மரங்களுக்கு கடத்தும். இந்த சிக்னல்களை புரிந்துகொள்ளும் பிற மரங்கள் தங்கள் மரத்தின் இலைகள் பூச்சிகள் சாப்பிடாத படி கசப்பாக மாற்றும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. SHARE.

Similar News

News October 24, 2025

ALERT: இந்த மாவட்டங்களில் நள்ளிரவு வரை மழை பெய்யும்

image

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருவள்ளூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த சில நாள்களுக்கு மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2025

தாறுமாறாக மாறும் தங்கம் விலை

image

கடந்த வாரம் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை, இந்த வாரம் சற்று தணிந்து ₹5,600 சரிவைக் கண்டுள்ளது. இது மேலும் சரியக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ரூபாய் மதிப்பு சரிவு, மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கிக் குவிப்பது, சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலை குறையாதது போன்ற காரணங்களால், நாளை தங்கம் விலை சற்று அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக கணிக்கின்றனர்.

News October 24, 2025

இவர்தான் அடுத்த தலைமை நீதிபதியா?

image

வரும் நவ.23-ம் தேதியுடன் CJI BR கவாய் 65 வயதை எட்டுவதால், ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், அடுத்த CJI-க்கான தேடலில் மத்திய அரசு இறங்கியுள்ளது. சீனியாரிட்டி அடிப்படையில் தகுதியானவரை பரிந்துரைக்க கோரி BR கவாயிடம் அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய CJI-க்கான ரேஸில் மூத்த நீதிபதி சூர்ய காந்த் முன்னிலையில் உள்ளார். அவரே நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!