News December 12, 2024
மழைக்காலத்தில் பயணமா?

மழைக்காலத்தில் வெளியூர் பயணம் செல்லும் போது உடைகள் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் தேவை. கனமான ஆடைகளைவிட மெல்லிய ஆடைகளே பொருத்தமானவை. மழையில் நனைந்தாலோ, துவைத்தாலோ விரைவாக உலர்ந்துவிடும். ஜீன்ஸ் ஆடைகளை மழையில் தவிர்த்தல் நலம். அதன் அசவுகரியம், துவைத்து காய வைப்பதில் சிரமம், ஈரப்பதத்தால் ஏற்படும் துர்நாற்றம் உங்களை சிரமத்துக்கு உள்ளாக்கும். முடிந்தவரை குறைவான எண்ணிக்கையில் உடைகளை எடுத்துச் செல்லுங்கள்.
Similar News
News August 28, 2025
விரைவில் தயாராகும் ‘கேப்டன் பிரபாகரன் 2’

‘கேப்டன் பிரபாகரன் 2’ படத்தை விரைவில் எடுப்பது குறித்து பரிசீலிப்பதாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சண்முக பாண்டியன் அவரது தந்தை விஜயகாந்தை போலவே இருப்பதால், நடிப்பதால், அவரை வைத்தே 2-ம் பாகத்தை இயக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆன ‘கேப்டன் பிரபாகரன்’ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2k கிட்ஸும் அப்படத்தை வெகுவாக ரசித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
News August 28, 2025
மோடி கங்கை நீர், ராகுல் ஊழல் குடும்பம்: பாஜக விமர்சனம்

குஜராத் மாடல் என்பது பொருளாதார மாடல் அல்ல, அது வாக்குறுதிப்படி மாடல் என ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்திருந்தார். இந்நிலையில், இதுபற்றி பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, மோடி கங்கை நீர் போன்று புனிதமானவர், ஆனால் ராகுல் காந்தியின் குடும்பம் ஊழல், பொய்கள் நிறைந்த குடும்பம் என சாடினார். சோனியா காந்தி, ராபர்ட் வதேரா, ராகுல் ஆகியோர் ஊழல் வழக்கில் ஜாமினில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
News August 28, 2025
ஒரு லட்சம் சேலைகளால் உருவான மெகா கணபதி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் சேலைகளை கொண்டு விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். ஒரு லட்சம் சேலைகளை மடித்து அடுக்கி 111 அடி உயர சிலை வடிவமைத்துள்ளனர். இந்த விநாயகரின் பெயர் ‘சுந்தர வஸ்தர மகா கணபதி’. சேலைகளை சூரத், தமிழகம், மேற்கு வங்கத்தில் இருந்து பெற்றுள்ளனர். வழக்கமாக விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைப்பார்கள். இங்கு சேலைகளை பக்தர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளனர்.