News April 30, 2025

34 வருடத்தில் 57 முறை டிரான்ஸ்ஃபர்.. இன்றுடன் ஓய்வு!

image

34 ஆண்டுகால சர்வீஸில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி அஷோக் கேம்கா இன்று ஓய்வு பெறுகிறார். நேர்மைக்கு பெயர் போன இவர், இதுவரை 57 முறை பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் மருமகன் ராபர் வதேரா தொடர்புடைய நில ஒப்பந்தத்தை ரத்து செய்து, தேசிய அளவில் பிரபலமானார். ஊழலை வேரோடு ஒழிப்பதே தனது லட்சியம் என கூறி வந்தவர், ஹரியானா போக்குவரத்து துறை கூடுதல் செயலாளராக இன்று ஓய்வு பெறுகிறார்.

Similar News

News November 21, 2025

கூட்டணி அமைச்சரவை உருவாகும்: பிரேமலதா

image

2026-ல் தமிழக அரசியலில் மாய மந்திரம் நடக்கும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆட்சியில் அனைவருக்கும் பங்கும், கூட்டணி அமைச்சரவையும் இந்த தேர்தலில் உருவாகும் என்றும் அவர் பேசியுள்ளார். மேலும் மக்களும், தொண்டர்களும் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும் எனவும், அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை சாத்தியமா?

News November 21, 2025

வெறும் வயிற்றில் டீ குடிப்பது நல்லதா?

image

காலையில் எழுந்து பல் துலக்கியவுடன் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் இது நல்லதல்ல என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். டீ தூளில் உள்ள கஃபைன், டானின் ஆகியவை வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும். மேலும், அமிலத்தன்மையை அதிகரித்து குமட்டலை உண்டாக்கும் என்றும், பற்களில் கறைகள் உண்டாகி அது நிரந்தரமாகிவிட வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

News November 21, 2025

நெல் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்துக: அன்புமணி

image

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்ததாக வெளியான செய்திகள் வருத்தமளிப்பதாக X-ல் அவர் பதிவிட்டுள்ளார். ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டிய நிலை உண்டாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!