News April 30, 2025

34 வருடத்தில் 57 முறை டிரான்ஸ்ஃபர்.. இன்றுடன் ஓய்வு!

image

34 ஆண்டுகால சர்வீஸில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி அஷோக் கேம்கா இன்று ஓய்வு பெறுகிறார். நேர்மைக்கு பெயர் போன இவர், இதுவரை 57 முறை பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் மருமகன் ராபர் வதேரா தொடர்புடைய நில ஒப்பந்தத்தை ரத்து செய்து, தேசிய அளவில் பிரபலமானார். ஊழலை வேரோடு ஒழிப்பதே தனது லட்சியம் என கூறி வந்தவர், ஹரியானா போக்குவரத்து துறை கூடுதல் செயலாளராக இன்று ஓய்வு பெறுகிறார்.

Similar News

News November 7, 2025

பிஹார் தேர்தலில் புதிய சாதனை.. 64.66% வாக்குப் பதிவு!

image

பிஹாரில் முதற்கட்டமாக நடந்த 121 தொகுதிகளுக்கான தேர்தலில், 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தனர். இதுவரை 62.57% வாக்குப்பதிவே அதிகமாக இருந்த நிலையில், தற்போது அதை விட அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக EC தெரிவித்துள்ளது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ளது.

News November 7, 2025

ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைத்த இந்தியா: டிரம்ப்

image

இந்தியாவுடனான வர்த்தக உறவு நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது டிரம்ப் கூடுதல் வரி விதித்திருந்தார். இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், PM மோடி அழைப்பின் பேரில் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரவுள்ளதாகவும் அவர் பேசியுள்ளார்.

News November 7, 2025

மீண்டும் புயல் சின்னம்.. மழை வெளுக்கப் போகுது

image

வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால் நவ.15-ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. IMD தகவலின்படி இன்று ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, வெளியே சென்றால் குடையுடன் செல்லுங்கள்.

error: Content is protected !!