News April 30, 2025

34 வருடத்தில் 57 முறை டிரான்ஸ்ஃபர்.. இன்றுடன் ஓய்வு!

image

34 ஆண்டுகால சர்வீஸில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி அஷோக் கேம்கா இன்று ஓய்வு பெறுகிறார். நேர்மைக்கு பெயர் போன இவர், இதுவரை 57 முறை பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் மருமகன் ராபர் வதேரா தொடர்புடைய நில ஒப்பந்தத்தை ரத்து செய்து, தேசிய அளவில் பிரபலமானார். ஊழலை வேரோடு ஒழிப்பதே தனது லட்சியம் என கூறி வந்தவர், ஹரியானா போக்குவரத்து துறை கூடுதல் செயலாளராக இன்று ஓய்வு பெறுகிறார்.

Similar News

News December 3, 2025

விஜய்க்கு காங்., திடீர் ஆதரவு..

image

பிற அரசியல் கட்சிகள், கூட்டத்தை கூட்ட பணம் உள்ளிட்டவற்றை செலவிடும் நேரத்தில், தவெகவுக்கு கூட்டத்தை குறைப்பதே சவாலாக உள்ளது என காங்., முக்கிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இன்று திமுகவுடன் காங்., கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவளிக்கும் வகையிலான இப்பதிவு, சீட் பேரத்தை அதிகரிப்பதற்காகவே என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

News December 3, 2025

₹500 கோடி இல்லனா படம் ஃப்ளாப் தான்!

image

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் படம் பெரிய விலைக்கு விற்பனையாகி இருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக ₹500 கோடியை கடந்தால் மட்டும் ஹிட் ஸ்டேட்டஸை அடைய முடியும். இதில் தமிழ்நாட்டில் ₹225 கோடியையும், வெளிநாடுகளில் ₹215 கோடியையும் வசூலிக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. இவ்வளோ பெரிய வசூலை அள்ளி, வெற்றி படமாக அமையுமா ‘ஜனநாயகன்’?

News December 3, 2025

இண்டியா கூட்டணியில் இருந்து விலகலா?

image

பிஹார் சீட் ஷேரிங்கில் நடந்த பிரச்னையால் IND கூட்டணியிலிருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்சா விலக உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த JMM நிர்வாகி குணால் சாரங், ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க முடியாது என தெரிந்ததால்தான் பாஜக புரளிகளை கிளப்பிவிடுவதாக விளக்கமளித்துள்ளார். மேலும், ஜார்க்கண்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் JMM எப்போதும் பாஜகவுக்கு அடிபணியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!