News May 26, 2024
உபரி ஆசிரியர்களை அரசுப் பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2,000 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. இதனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
திருமணமானவர்களுக்கு மட்டும்!

40 வயதுக்கு மேல் உள்ளவர்கள், வாரம் 2 முறையாவது உறவில் ஈடுபடுவது, மாரடைப்பு அபாயத்தை 50% குறைப்பதாக அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, 40 முதல் 70 வயது வரையான ஆயிரக்கணக்கான ஆண்களிடம் 16 ஆண்டுகள் ஆய்வு செய்தனர். இதன்முடிவில், உடலுறவுக்கும் இதயநலத்துக்கும் தொடர்பு உள்ளதை கண்டறிந்தனர். மாதத்தில் ஒருமுறைக்கு குறைவாக உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம்.
News September 17, 2025
ஆயுதங்களை ஒப்படைக்க தயார்: மாவோயிஸ்ட் அறிவிப்பு

நிபந்தனையுடன் ஆயுதங்களை ஒப்படைக்க தயார் என்று அமித்ஷாவுக்கு மாவோயிஸ்ட் இயக்கம் கடிதம் எழுதியுள்ளது. ஆபரேஷன் ககர் நடவடிக்கை மற்றும் என்கவுன்ட்டர்களை உடனடியாக நிறுத்தினால் ஆயுதங்களை ஒப்படைக்க தயார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 மார்ச்சுக்குள் மாவோயிஸ்ட்களை முற்றிலும் ஒழிக்க அமித்ஷா காலக்கெடு நிர்ணயித்த நிலையில், மாவோயிஸ்டுகளின் அறிவிப்பு பாதுகாப்பு படைகளுக்கு பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.
News September 17, 2025
திமுகவுக்கு ஜாக்பாட்? டெல்லி ஆலோசனையின் பின்னணி

டெல்லியில் அமித்ஷாவை EPS சந்தித்த அதே நேரத்தில், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இது அதிமுகவில் மட்டுமல்ல, தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், கொங்கு பகுதியை திமுக குறிவைத்திருக்கும் நிலையில், அங்குள்ள அதிமுக தலைவர்களுக்கு இடையேயான உரசல் திமுகவுக்கு சாதகமாகிவிடக் கூடாது என்பதில் பாஜக தலைமை கவனமாக உள்ளதாக கூறப்படுகிறது.