News May 26, 2024
உபரி ஆசிரியர்களை அரசுப் பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2,000 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. இதனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2026
குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல்: நயினார்

வரும் தேர்தலில் திமுக நடத்தும் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என நயினார் கூறியுள்ளார். NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 தேர்தலானது TN Vs DELHI தேர்தல் என CM ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், இது குடும்ப ஆட்சிக்கும் TN மக்களுக்கும் இடையிலான தேர்தல் என்று தெரிவித்தார். மேலும், PM மோடி தமிழகம் வரும் போதெல்லாம் தாய்மாமன் சீர் போல பல கோடி மதிப்புள்ள திட்டங்களை கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
News March 11, 2026
நடிகை த்ரிஷாவின் புதிய POST

குந்தவை காஸ்ட்யூமை நாய் அணிந்திருக்கும் போட்டோவை த்ரிஷா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். வேறொருவரின் பதிவை தனது இன்ஸ்டா ஸ்டோரியாக பகிர்ந்துள்ள அவர், அந்த போட்டோவிற்கு ஹார்ட்டின் எமோஜியை வைத்துள்ளார். தன்னை விமர்சித்த பார்த்திபனுக்கு பதிலடியாக இந்த போட்டோவை த்ரிஷா வெளியிட்டுள்ளார் என்றே நெட்டிசன்கள் SM-ல் பேசத் தொடங்கி விட்டனர்.
News March 11, 2026
சிலிண்டர் சிக்கல்.. அரசு ஹாஸ்பிடல்களில் புதிய ஏற்பாடு

நாடு முழுக்க சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் அரசு ஹாஸ்பிடல்களுக்கு முக்கிய ஆலோசனைகளை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வழங்கியுள்ளது. நோயாளிகளுக்கு உணவு வழங்குவது பாதிக்கப்படாமல் இருக்க குறைவான எரிபொருள் தேவைப்படும் உணவுகளை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவல், ரொட்டி, ஓட்ஸ் போன்ற உணவுகள் நோயாளிகளின் ஃபுட் மெனுவில் அதிகம் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


