News May 28, 2024
வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு நாளை முதல் பயிற்சி

மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. இந்நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் 1,433 ஊழியர்களுக்கு நாளை (மே 29) முதல் கட்ட பயிற்சியும், ஜூன் 3 ஆம் தேதி இரண்டாம் கட்ட பயிற்சியும் அளிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை ஆணையருமான ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Similar News
News August 20, 2025
ரஷ்ய கச்சா எண்ணெயால் யாருக்கு லாபம்?

ரஷ்யாவிலிருந்து <<17464064>>மலிவு விலையில்<<>> வாங்கும் கச்சா எண்ணெயால், உண்மையில் பலனடைவது யார்? பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்காததால், அதன்மூலம் அரசும், தனியார் நிறுவனங்களும் நேரடியாக லாபமடைகின்றன. மேலும், அதிக விலைக்கு ஏற்ப, வரியும் அதிகம் வசூலிக்கப்படுகிறது. தவிர, இந்த எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோலிய பொருள்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, தனியார் நிறுவனங்கள் கூடுதல் லாபம் பார்க்கின்றன. மக்களுக்கு?
News August 20, 2025
கூட்டணி சிக்கலில் தவிக்கும் திருமாவளவன்: நயினார்

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு எதிராக எதுவும் பேச முடியாமல் திருமாவளவன் சிக்கலில் இருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நெல்லையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், திருமாவளவன் தனது நண்பராக இருந்தாலும், தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தர விவகாரத்தில் அவரது கருத்து தவறானது என்றார். இதே கருத்தை திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் மாநில செயலாளர் சண்முகமும் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
News August 20, 2025
பள்ளி மாணவர்களுக்கு புதிதாக 5 AI படிப்புகள் அறிமுகம்

5 இலவச AI படிப்புகளை மத்திய அரசு ‘ஸ்வயம்’ தளத்தில் வழங்கியுள்ளது. <