News June 26, 2024
மின் ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி & பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக பணியாளர்களின் தொழில்நுட்பம் மற்றும் ஆளுமை திறன்களை மேம்படுத்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், ₹75 கோடி மதிப்பீட்டில் மூன்று புதிய 33/11 கி.வோ துணை மின் நிலையங்கள், ஆறு 33/11 கி.வோ துணை நிலையங்களிலுள்ள மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
இது தான் இந்திய – சீன இளைஞர்களுக்கான வேறுபாடு

இந்தியாவின் GEN Z இளைஞர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு கடன்களை வாங்குவது தெரியவந்துள்ளது. நடப்பாண்டின் தொடக்கத்தில் வாங்கப்பட்ட 27% பெர்சனல் லோன்கள் பயணம், ஐபோன் உள்ளிட்ட குறுகியகால ஆடம்பர தேவைகளுக்காக வாங்கப்பட்டுள்ளதாக Investment Banker சர்தாக் அஹுஜா தெரிவித்துள்ளார். அதேசமயத்தில், சீன இளைஞர்களோ எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தங்கத்தில் முதலீடு செய்ய கடன்களை வாங்குவதாக அவர் கூறியுள்ளார்.
News December 23, 2025
₹100 கோடி பரிசு அறிவித்த சந்திரபாபு நாயுடு!

ஆந்திராவைச் சேர்ந்த யாராவது ஒருவர் குவாண்டம் அறிவியலுக்காக நோபல் பரிசு வென்றால் அவர்களுக்கு ₹100 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அம்மாநில CM சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அமராவதி வேலியில் இன்று Quantum Talk by CM CBN என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற சந்திரபாபு, குவாண்டம் மற்றும் அது தொடர்பான துறைகளில் நிபுணர்களை உருவாக்க ஒரு செயல் திட்டத்தைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
News December 23, 2025
‘ஜனநாயகன்’ Vs ‘பராசக்தி’: யாருக்கு அதிக திரைகள்?

ஜனநாயகனும், பராசக்தியும் அடுத்தடுத்த நாள்களில் வெளியாவதால், திரையரங்குகள் யாருக்கு அதிக திரையரங்குகள் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலுள்ள 1100-க்கும் அதிகமான திரைகளில் 45% பராசக்திக்கும், 55 % ஜனநாயகனுக்கும் கிடைக்கும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், ஒரே சமயத்தில் 2 பெரிய படங்கள் வருவதால் ஜனநாயகனுக்கும் வசூலில் சரிவு ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


