News March 15, 2025

ரயில் கடத்தல்: இந்தியா மீது பாக். மீண்டும் குற்றச்சாட்டு

image

பயணிகளுடன் ரயிலை பலுசிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திய சம்பவத்திற்கு இந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான IS, பலுசிஸ்தான் மாகாண அரசு ஆகியவை ரயில் கடத்தல் மற்றும் பிற தீவிரவாத சம்பவங்களுக்கு இந்திய உளவு அமைப்பு ‘ரா’ நிதி உதவி செய்து, திட்டம்தீட்டி கொடுத்ததாக சாடியுள்ளன. ஏற்கெனவே இதே குற்றச்சாட்டை பாகிஸ்தான் முன்வைத்தபோது, இந்தியா மறுத்திருந்தது.

Similar News

News March 15, 2025

பெண் எஸ்.ஐ. வன்கொடுமை, வீடியோ.. போலீஸ்காரர் கைது

image

இமாச்சல பிரதேசத்தில் பெண் எஸ்.ஐ.யை போலீஸ்காரர் பாலியல் வன்கொடுமை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணி நிமித்தமாக வெளியூர் சென்ற பெண் எஸ்.ஐ. ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது அறையை புக் செய்ய உதவிய போலீஸ்காரர், கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதை காட்டி மிரட்டி தொடர்ந்து ரேப் செய்துள்ளார். இதுகுறித்து பெண் எஸ்.ஐ. அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.

News March 15, 2025

ஓய்வுக்கு பின் என்ன செய்வேன்? – மனம் திறந்த கோலி!

image

கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் விராட் கோலி, பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது 36 வயதாகும் அவர், ஓய்வு குறித்து மனம் திறந்துள்ளார். ஓய்வுபெற்ற பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும், சக வீரரிடம் இதுபற்றி கேட்டபோது அவரும் இதே பதிலைத் தான் கூறினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், நிறைய பயணங்கள் மேற்கொள்வேன் என்றும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

News March 15, 2025

மகன்களை கொன்ற கொடூரத் தந்தை… அதிர்ச்சிப் பின்னணி!

image

அப்பாதான் எல்லோருக்கும் முதல் ஹீரோ. ஆனால், ஆந்திராவில் 2 சிறுவர்களுக்கு அப்பாவே வில்லனாகியுள்ளார். காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த ONGC ஊழியரான சந்திர கிஷோர், சரியாக படிக்கவில்லை எனக்கூறி தனது 2 மகன்களை வாளி நீரில் அமுக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அவரும் தற்கொலை செய்துள்ளார். 3 பேரின் உடல்களை கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது. கொடூர தந்தையின் செயல் பற்றி உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!