News April 9, 2025
10 வயது மூத்த பெண்ணுடன் காதலால் நேர்ந்த சோகம்

மதுரையில் தனியாக வாழ்ந்து வந்த மணிகண்டனுக்கு அந்த பகுதியை சேர்ந்த தன்னை விட 10 வயது மூத்த பெண்ணான மயிலம்மாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்களது தகாத உறவு இரு வீட்டாருக்குமே தெரிய வர இரு தரப்புமே அவர்களை கண்டித்துள்ளனர். இருப்பினும் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையடுத்து, அவர்களை பிரிக்க உறவினர்கள் முடிவு செய்ததால், இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
Similar News
News April 17, 2025
சிவராஜ்குமார் பெண்ணாக பிறந்திருந்தால்?

சிறுவயதில் கமல்ஹாசனை கட்டிப்பிடித்துவிட்டு 3 நாள்கள் குளிக்காமல் இருந்ததாக நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். கமலின் ஆரா மற்றும் ஸ்மெல் தன் மீது இருக்க வேண்டும் என நினைத்து அப்படி செய்ததாகவும், அந்த அளவிற்கு அவருடைய ரசிகன் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒருவேளை தான் பெண்ணாக பிறந்திருந்தால் அவரைத் தான் நிச்சயமாக திருமணம் செய்திருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
News April 17, 2025
‘புலே’ படத்தை எதிர்ப்பவர்களை கடுமையாக சாடிய அனுராக்

‘புலே’ பட ரிலீஸை எதிர்க்கும் பிராமண சங்கங்களை அனுராக் காஷ்யப் கடுமையாக சாடியுள்ளார். இந்த நாட்டில் சாதி இல்லையென்றால், ஜோதிராவ் புலே, சாவித்ரிபாய் புலே போன்றோர் ஏன் போராட போகிறார்கள் எனவும், பிராமணர்கள் உண்மையிலேயே வெட்கப்படுகிறார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்ட படம் குறித்து சாதி சங்கத்திற்கு எப்படி தெரியவந்தது எனவும் வினவியுள்ளார்.
News April 17, 2025
பிரபல பெண் எழுத்தாளர் காலமானார்

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளரும், பழங்குடியின ஆர்வலருமான ரோஸ் கெர்கட்டா காலமானார். கொரோனா காலகட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து படுத்த படுக்கையாக இருந்தார். மேலும் அவர் பல்வேறு உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதுகுறித்து கேள்விப்பட்டு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.