News September 30, 2025
கூட்ட நெரிசலுக்கு தவெகதான் காரணம்: போலீஸ்

கரூர் துயர வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளையில், ஒருமணி நேரத்திற்கும் மேலாக காரசாரமாக விவாதம் நடைபெற்றது. பிரசார இடத்திற்கு 50 மீட்டருக்கு முன்பே விஜய்யை பேச சொல்லியும் தவெகவினர் கேட்கவில்லை; கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு தவெக தான் காரணம்; ராங் ரூட்டில் போக வேண்டாம் என்ற எச்சரிக்கையை தவெகவினர் மீறினர் என தவெக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை போலீஸ் முன்வைத்தது.
Similar News
News September 30, 2025
அனைத்து உண்மைகளும் வெளிவரும்: விஜய்

கரூர் விவகாரத்தில் தங்கள் மேல் எந்த தவறும் இல்லை என விஜய் விளக்கமளித்துள்ளார். மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும், அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற அவர், விரைவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும் எனக் கூறியுள்ளார். கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து மக்கள் பேசுவது, கடவுளே இறங்கி வந்து சாட்சி சொல்வது போல இருந்ததாகவும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
News September 30, 2025
சற்றுமுன்: விஜய் அவசர ஆலோசனை

தவெக நிர்வாகிகளுடன் விஜய் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவினர் கைதாகியுள்ள நிலையில், அவர்களை ஜாமினில் வெளியே கொண்டுவர மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கை மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக விஜய் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. விஜய்யின் நீலாங்கரை வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.
News September 30, 2025
ஆயுத பூஜைக்கு சாமி கும்பிட உகந்த நேரம் என்ன?

செய்யும் தொழிலை தெய்வமாக பாவித்து, அதற்கு உதவியாக இருக்கும் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றை மதிக்கவும், வணங்கவும் கொண்டாடப்படுவதே ஆயுத பூஜை. நவராத்திரி கடைசி நாளான, நாளை அக்டோபர் 1-ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. புதன்கிழமை என்பதால், காலை 9 மணிக்கு மேல் மதியம் 12 மணிக்குள் நாளை அம்பாளை வழிபடுவது நல்லது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.