News June 23, 2024
குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் இன்று ஞாயிற்றுகிழமை வார விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையிலே குவிந்தனர். அவர்கள் கடலில் இருந்து எழும் சூரிய உதயத்தை கண்டு ரசித்து, தங்களது செல்போனில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் கடலில் கால்களை நனைத்து குடும்பத்துடன் விளையாடி வருகின்றனர்.
Similar News
News November 8, 2025
குமரி: ஊராட்சியில் ரூ.50,400 சம்பளத்தில் வேலை., உடனே APPLY

குமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் <
News November 8, 2025
குமரியில் மீனவர்கள் கவலை

குளச்சல் பகுதியில் 300 விசைபடகுகளும், 1000க்கும் மேல் வள்ளம், கட்டுமரங்களும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. நேற்று மீனவர்கள் வலையில் அதிக அளவில் சாளை மீன்கள் சிக்கின. அவற்றை குளச்சல் ஏல கூடத்தில் ஏலமிட்டபோது ஒரு குட்டை சாளை மீன் ரூ.700 முதல் ரூ.800 விலை போனது. ஏலம் போகாத மீன்களை ரூ.100 விலையில் சிறு கூறுகளாக விற்றனர். அதிக மீன்கள் கிடைத்தும் போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.
News November 8, 2025
குமரி: பைக் விபத்தில் வாலிபர் பலி

கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூரில் இருந்து முள்ளுவிளை நோக்கி வாலிபர் பைத்தில் சென்றுகொண்டிருந்தார். பைக் ரோட்டில் கிடந்த பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறி வாலிபர் கிழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலே வாலிபர் உயிரிழந்தார். விபத்துக்குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


