News April 27, 2025
பஹல்காமில் மீண்டும் சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக இருந்த பஹல்காமில், பயங்கரவாத தாக்குதலால் சுற்றுலா தொழில் முடங்கியது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பஹல்காமுக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். எனினும், சம்பவம் நடந்த பைசரன் பள்ளத்தாக்கில் மட்டும் சுற்றுலா பயணியரை பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை. காஷ்மீரை முடக்க நினைக்கும் பயங்கரவாதிகளுக்கு பயணியரின் வருகை சரியான பதிலடி!
Similar News
News January 11, 2026
‘ஆட்சியில் பங்கு’ அதிமுகவுக்கு தமிழ் மாநில காங்., நெருக்கடி

‘ஆட்சியில் பங்கு’ என்ற முழக்கத்தை வைத்து திமுகவுக்கு காங்., நெருக்கடி கொடுப்பதுபோல் அதிமுகவுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் தமாகா சமீபத்தில் இணைந்துள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் யுவராஜா, அதிமுக ஆட்சி அமைத்தாலும், அது ‘கூட்டணி ஆட்சி தான்’ என்றும், 2026 -ல் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று EPS முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 11, 2026
ஊழியர்களுக்கு ₹6210 கோடியை வாரிக் கொடுத்த முதலாளி!

₹87,000 கோடிக்கு அதிபதியான Shriram Group குழுமத்தின் நிறுவனர் ராமமூர்த்தி தியாகராஜன், தனது ஊழியர்களுக்காக வாரி வழங்கியுள்ளார். நிறுவனத்தில் தனது பங்கான ₹6,210 கோடியை அவர், Shriram Ownership Trust-க்கு எழுதி வைத்துள்ளார். எளிமையான வாழ்க்கையே விரும்பும் ராமமூர்த்தி தியாகராஜனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News January 11, 2026
என்ன செய்ய போகிறார் CM ஸ்டாலின்?

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் ஒருபுறமும், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றொருபுறமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், பணி நிரந்தரம் கோரி தூய்மை பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு முக்கிய வாக்கு வங்கியாக பார்க்கப்படும் அரசு ஊழியர்களின் போராட்டங்கள் ஆளும் திமுக அரசுக்கு புதிய சிக்கலை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?


