News April 27, 2025

பஹல்காமில் மீண்டும் சுற்றுலா பயணிகள்

image

சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக இருந்த பஹல்காமில், பயங்கரவாத தாக்குதலால் சுற்றுலா தொழில் முடங்கியது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பஹல்காமுக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். எனினும், சம்பவம் நடந்த பைசரன் பள்ளத்தாக்கில் மட்டும் சுற்றுலா பயணியரை பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை. காஷ்மீரை முடக்க நினைக்கும் பயங்கரவாதிகளுக்கு பயணியரின் வருகை சரியான பதிலடி!

Similar News

News December 28, 2025

‘நான் இன்னும் உயிரோடு தான் இருக்கேன்’

image

சாதாரண பூனைகளை போலல்லாமல், தட்டையான தலை, தண்ணீரில் மீன் பிடிக்கும் அசாத்திய திறமை கொண்ட பூனை இனம் Flat-headed cats. சுமார் 30 ஆண்டுகளாக மனிதர்களின் கண்களில் படாமல் இருந்ததால் அழிந்து விட்டதாக கருதப்பட்டது. இந்நிலையில், ‘நான் இன்னும் இருக்கிறேன்’ என்பது போல, மீண்டும் தன்னை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் தெற்கு பதியில் உள்ள அடர்ந்த சதுப்பு நிலக்காடுகளில் இவை தற்போது தென்பட்டுள்ளன.

News December 28, 2025

நகை கடன்.. முக்கிய அறிவிப்பு

image

<<18646177>>நகை கடன்<<>> பெறுபவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வங்கிகளுக்கு புதிய அறிவுறுத்தல்களை RBI வழங்கியுள்ளது. இனி நகையை அடகு வைத்து கடன் பெறுவோருக்கு குறைவான தொகையே கிடைக்கும். அதாவது, முன்பு ₹1 லட்சம் மதிப்புள்ள நகைகளுக்கு ₹72,000 வரை கடன் பெறலாம். தற்போது, அந்த மதிப்பு ₹60,000 – ₹65,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தங்கம் விலையில் ஏற்படும் நிலையில்லா மாற்றமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. SHARE IT.

News December 28, 2025

சொகுசு கப்பலில் தவிக்கும் 123 பேர்!

image

பப்புவா நியூ கினியில் உள்ள பாறையில் மோதி தரைதட்டிய ஆஸி. சொகுசு கப்பல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கெயின்ஸிலிருந்து டிச.18 அன்று புறப்பட்ட அந்த கப்பலில் 80 பயணிகள், 43 ஊழியர்கள் உட்பட 123 பேர் உள்ளனர். வரும் டிச.30 உடன் பயணம் முடிவடைய இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதே கப்பலில் கடந்த அக்டோபரில் பயணித்த 80 வயது மூதாட்டி மரணமடைந்தது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!