News April 27, 2025
பஹல்காமில் மீண்டும் சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக இருந்த பஹல்காமில், பயங்கரவாத தாக்குதலால் சுற்றுலா தொழில் முடங்கியது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பஹல்காமுக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். எனினும், சம்பவம் நடந்த பைசரன் பள்ளத்தாக்கில் மட்டும் சுற்றுலா பயணியரை பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை. காஷ்மீரை முடக்க நினைக்கும் பயங்கரவாதிகளுக்கு பயணியரின் வருகை சரியான பதிலடி!
Similar News
News December 12, 2025
கிருஷ்ணகிரி; இரவு ரோந்துப் பணி விவரம்

இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு ரோந்துப் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
ஏதேனும் அசம்பாவிதம் அல்லது உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் ரோந்து அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். அவசர உதவிக்கு உதவி எண் 100-ஐ டயல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News December 12, 2025
ஹாஸ்பிடல் மீது தாக்குதல்.. 34 பேர் பலி

மியான்மரில் நிலவும் உள்நாட்டு போரால், பொதுமக்கள் தொடர்ச்சியாக பலி வாங்கப்படுகின்றனர். இந்நிலையில், Arakan ஆர்மியின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாஸ்பிடல் மீது மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் நோயாளிகள், டாக்டர்கள் என 34 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


