News April 27, 2025
பஹல்காமில் மீண்டும் சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக இருந்த பஹல்காமில், பயங்கரவாத தாக்குதலால் சுற்றுலா தொழில் முடங்கியது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பஹல்காமுக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். எனினும், சம்பவம் நடந்த பைசரன் பள்ளத்தாக்கில் மட்டும் சுற்றுலா பயணியரை பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை. காஷ்மீரை முடக்க நினைக்கும் பயங்கரவாதிகளுக்கு பயணியரின் வருகை சரியான பதிலடி!
Similar News
News December 3, 2025
BREAKING: ‘ரோடு ஷோ’ முடிவை மாற்றினார் விஜய்

புதுச்சேரியில் வரும் 5-ம் தேதி ‘ரோடு ஷோ’ நடத்த திட்டமிட்டிருந்த விஜய், தனது முடிவை மாற்றியுள்ளார். தொடர் மழை காரணமாக ‘ரோடு ஷோ’ திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி இல்லை எனவும், வேண்டுமானால் திடலில் பொதுக்கூட்டமாக நடத்திக் கொள்ளலாம் என <<18447638>>அம்மாநில காவல்துறை<<>> கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
News December 3, 2025
டாக்டர்கள் ஏன் நாக்கை நீட்ட சொல்கிறார்கள்?

எந்த ஒரு பிரச்னைக்காக ஹாஸ்பிடல் சென்றாலும், டாக்டர்கள் முதலில் ‘நாக்கை நீட்டுங்கள்’ என்பார்கள். அது ஏன் என யோசித்தது உண்டா? நாக்கின் தன்மையை வைத்தே உடல் ஆரோக்கியத்தை அறியலாம். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால், நாக்கு மஞ்சள் நிறத்திலிருக்கும். உடலில் ரத்த சோகை இருந்தால், நாக்கு வறண்டு போகும். நோய்த்தொற்று அதிகமாக இருந்தால், நாக்கு வெள்ளையாக மாறும். தைராய்டு இருந்தால், நாக்கு பெரிதாகும்.
News December 3, 2025
பைடன் கையெழுத்திட்ட ஆவணங்கள் செல்லாது: டிரம்ப்

நமது கையெழுத்தை அச்சு அசல் அப்படியே போடும் ஒரு நவீன கருவியே Auto Pen. இதை USA-வில் பைடன் உள்பட பல அதிபர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், Auto Pen வசதி மூலம் பைடன் கையெழுத்திட்ட அனைத்து ஆவணங்களும் செல்லாது என டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், பைடன் Auto Pen பயன்படுத்தியதன் மூலம், வயது மற்றும் மனநிலை காரணமாக அவரால் நிர்வாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தெரிகிறது என விமர்சித்துள்ளார்.


