News April 27, 2025
பஹல்காமில் மீண்டும் சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக இருந்த பஹல்காமில், பயங்கரவாத தாக்குதலால் சுற்றுலா தொழில் முடங்கியது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பஹல்காமுக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். எனினும், சம்பவம் நடந்த பைசரன் பள்ளத்தாக்கில் மட்டும் சுற்றுலா பயணியரை பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை. காஷ்மீரை முடக்க நினைக்கும் பயங்கரவாதிகளுக்கு பயணியரின் வருகை சரியான பதிலடி!
Similar News
News January 11, 2026
இந்திய அணிக்கு டஃப் கொடுக்கும் நியூசிலாந்து

வதோதராவில் நடந்துவரும் இந்தியாவுக்கு எதிரான முதல் ODI-ல் கான்வே, ஹென்றி நிக்கோலஸ் இருவரும் 50 அடித்து நியூசிலாந்துக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளனர். 21 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் எடுத்துள்ளது. வரும் ஓவர்களில் இந்தியா விக்கெட் வீழ்த்தினால் மட்டுமே நியூசிலாந்தின் ரன்வேகத்தை கட்டுப்படுத்த முடியும். முன்னதாக, 4 ரன்னில் நிக்கோலஸின் கேட்ச்சை குல்தீப் தவறவிட்டார்.
News January 11, 2026
மக்கள் விரும்பாத கட்சியாக மாறிய காங்கிரஸ்: குஷ்பு

MGNREGA திட்ட பெயர் மாற்றத்தை கண்டித்து காங்., நடத்தும் போராட்டத்தை ஒரு ஏமாற்று வேலை என குஷ்பு சாடியுள்ளார். நாட்டிற்காக உழைத்த பல தலைவர்களின் பெயர்களை திட்டங்களுக்கு வைக்க சொல்லி காங்., போராட்டம் நடத்தாது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். காங்., ஆட்சியில் திட்டங்களுக்கு சோனியா குடும்ப பெயரை மட்டுமே சூட்டியதாக குறிப்பிட்ட அவர், தற்போது மக்கள் விரும்பாத கட்சியாக காங்., மாறிவிட்டது என்றும் கூறினார்.
News January 11, 2026
தமிழ் எந்த பேதமும் காட்டாது: உதயநிதி

சாதி, மதம், முதலாளி, தொழிலாளி உள்ளிட்ட அனைத்தையும் தாண்டி நம்மை இணைத்திருப்பது தமிழ் தான் என்று DCM உதயநிதி கூறியுள்ளார். அயலக தமிழர் விழாவில் பேசிய அவர், தமிழ் மொழி யாரையும் வேறுபடுத்தி பார்க்காது, பேதமும் காட்டாது என்றார். மேலும், ஒன்றாக இணையாத எந்த இனமும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை என்ற உதயநிதி, அயலகத் தமிழர்களும் தங்களது கனவுகளை தமிழக அரசிடம் தெரிவிக்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


