News April 27, 2025
பஹல்காமில் மீண்டும் சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக இருந்த பஹல்காமில், பயங்கரவாத தாக்குதலால் சுற்றுலா தொழில் முடங்கியது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பஹல்காமுக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். எனினும், சம்பவம் நடந்த பைசரன் பள்ளத்தாக்கில் மட்டும் சுற்றுலா பயணியரை பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை. காஷ்மீரை முடக்க நினைக்கும் பயங்கரவாதிகளுக்கு பயணியரின் வருகை சரியான பதிலடி!
Similar News
News January 18, 2026
திருப்பத்தூர்: திருமண தடை நீங்க அற்புத கோயில்

திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் பகுதியில் அமைந்துள்ளது 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்கநாதேஸ்வரர் கோயில். அங்கம் பிளவு பட்டு இருப்பதால் அங்க நாதேஸ்வரர் என்ற பெயர் சொல்லி அழைக்கின்றனர். இந்த கோயிலில் அம்மன் சுபத்ரா ஜனனி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். இங்கு வந்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். திருமண தடையுள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News January 18, 2026
விஜய்க்கு கபில்சிபல் எச்சரிக்கை!

பாஜகவுடன் சமரசம் செய்தால் DCM பதவி கிடைக்கலாம், ஆனால் உங்கள் அரசியல் எதிர்காலம் முடிந்துவிடும் என MP கபில்சிபல் கூறியுள்ளார். மேலும், வெற்றிபெற முடியாத மாநிலங்களில் அங்குள்ள சிறிய கட்சிகளுடன் BJP கூட்டணி அமைக்கும், ஆனால் ஆட்சிக்கு வந்தபின் புறக்கணிக்கும் எனவும், அதை TN-ல் முயற்சிப்பதாகவும் எச்சரித்துள்ளார். விஜய்யை NDA கூட்டணிக்குள் இழுக்க BJP முயற்சிப்பதாக பேசப்படுவது கவனிக்கத்தக்கது.
News January 18, 2026
இந்த அறிகுறி இருந்தால் சர்க்கரை நோய் கன்பார்ம்!

உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால் சில அறிகுறிகள் மூலம் அதை அறிந்து கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அளவுக்கு அதிகமான தாகம், பசி உணர்வு அதிகரிப்பு, அதீத உடல்சோர்வு, கண்பார்வை பிரச்னை, புண், காயம் மெதுவாக ஆறுவது உள்ளிட்டவை அதில் அடங்குமாம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக டாக்டர்களிடம் ஆலோசனையை பெறுவது நல்லது.


