News April 27, 2025
பஹல்காமில் மீண்டும் சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக இருந்த பஹல்காமில், பயங்கரவாத தாக்குதலால் சுற்றுலா தொழில் முடங்கியது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பஹல்காமுக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். எனினும், சம்பவம் நடந்த பைசரன் பள்ளத்தாக்கில் மட்டும் சுற்றுலா பயணியரை பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை. காஷ்மீரை முடக்க நினைக்கும் பயங்கரவாதிகளுக்கு பயணியரின் வருகை சரியான பதிலடி!
Similar News
News December 16, 2025
வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் PHOTOS

இந்திய ரயில்வே, முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. பாட்னா–டெல்லி ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில், மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு, சுமார் 1,000 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 8 மணி நேரத்தில் கடக்கும். இந்த ரயில், 16 பெட்டிகளுடன் மொத்தம் 827 படுக்கை வசதிகளைக் கொண்டிருக்கும். மேலே உள்ள ஸ்லீப்பர் ரயிலின் போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 16, 2025
பொங்கல் பரிசுத் தொகுப்பு.. முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹750 மதிப்புள்ள அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என CM ரங்கசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், ஜன.3-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு விநியோகம் தொடங்கும் என தற்போது அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 16, 2025
ஈரோடு பரப்புரையில் வரலாறு காணாத பாதுகாப்பு: KAS

டிச.18-ல் ஈரோட்டில் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இதற்காக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகம் இதுவரை கண்டிராத பாதுகாப்புடன் இந்த பரப்புரை நடைபெறும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தலா 40 கேமராக்கள், வாக்கி டாக்கிகள், 24 ஆம்புலன்ஸ்கள், 72 டாக்டர்கள், 120 நர்ஸ்கள், 3 தீயணைப்பு வாகனங்கள், தண்ணீர் பாட்டில், நடமாடும் கழிவறை வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.


