News April 13, 2024
சிறையில் கெஜ்ரிவாலுக்கு சித்ரவதை

மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் சித்ரவதை செய்யப்படுவதாக AAP எம்பி சஞ்சய் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் உத்தரவின் பெயரில் கெஜ்ரிவால் சித்ரவதை செய்யப்படுகிறார். அவரது மன உறுதியை சிதைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அவரை சந்திக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
Similar News
News November 17, 2025
தவெக புயலில் திமுக காணாமல் போய்விடும்: அருண்ராஜ்

விஜய் ஒரு அட்டை தாஜ்மஹால் என உதயநிதி விமர்சித்ததற்கு தவெக அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். அக்குடும்பத்தில் பிறந்த காரணத்தால்தான் உதயநிதிக்கு எந்த தகுதியுமே இல்லாமல் MLA சீட் கிடைத்தது என்றும் இப்படி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது எனவும் கூறியுள்ளார். மேலும், திமுக சீட்டுக்கட்டால் ஆன கோட்டை என்ற அவர், தவெக மாதிரியான பெரிய புயலில் அந்த கட்சி காணாமல் போய்விடும் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
தோனிக்கும் KL ராகுலுக்கும் இடையே உள்ள ஸ்பெஷல்

தோனி என்றாலே ஸ்பெஷல் தான். அதிலும், KL ராகுலுக்கு கூடுதல் ஸ்பெஷல் போல. ஏனென்றால், தோனியிடம் இருந்து மட்டுமே தனது அனைத்து சர்வதேச போட்டிகளுக்கான cap-ஐயும் தான் பெற்றுள்ளதாக ராகுல் கூறியுள்ளார். இதுவே ஒரு தனித்துவம் தான் என்றும் அவர் நெகிழ்ந்துள்ளார். SA-க்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் விளையாடியதன் மூலம், தோனி, கம்பீர், ரோஹித் வரிசையில் 4,000 டெஸ்ட் ரன்கள் கிளப்பில் ராகுல் இணைந்துள்ளார்.
News November 17, 2025
BREAKING: மழை அலர்ட்.. பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

23 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என IMD எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, காஞ்சி, தி.மலை, பெரம்பலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, நாகைக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்னும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


