News December 15, 2024
மனைவி குடும்பத்தின் டார்ச்சர்: மீண்டும் ஒருவர் தற்கொலை

கர்நாடக டிராபிக் போலீஸ் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமனாரின் தொல்லை தாங்காமல், தற்கொலை செய்து கொண்டுள்ளார். திப்பண்ணா(34) எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தில், தனது மாமனார் தன்னை மிரட்டியதாகவும், தற்கொலை செய்து கொள் நீ இல்லாமல் என் மகள் நன்றாக இருப்பாள் எனக் கூறியது தன்னை மிகவும் காயப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டை உலுக்கிய அதுல் சுபாஷ் தற்கொலையை நடந்த சில தினங்களில், மீண்டும் ஒரு சம்பவமா?
Similar News
News March 12, 2026
பாரதியார் பொன்மொழிகள்

*விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால் தோற்கடிக்க அல்ல உன்னைப் பார்க்கவே எவனும் பயப்படுவான். *சொல்வது தெளிந்து சொல்; செய்வது துணிந்து செய். *காயங்கள் குணமாக காலம் காத்திரு; கனவுகள் நினைவாக காயம் பொறுத்திரு. *மலையை பார்த்து வியந்துவிடாதே; மலை மீது ஏறினால் அதுவும் உன் காலின் கீழ்தான். *விழாமல் ஓடுவேன் என்பது நம்பிக்கை.. விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்பது தன்னம்பிக்கை.
News March 12, 2026
பள்ளத்தில் மோதியதால் திரும்பி வந்த பெண்ணின் உயிர்!

டாக்டர்களால் கைவிடப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிர்பிழைத்தால் ’மெடிக்கல் மிராக்கிள்’ என சொல்வதுண்டு. அப்படிப்பட்ட மிராக்கிள் சம்பவம் உ.பி.,யில் நடந்துள்ளது. மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட வினீதா சுக்லா என்ற பெண், இறுதிச் சடங்குகளுக்காக ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார். வழியில் ஆம்புலன்ஸ் ஒரு பள்ளத்தில் மோதியதால் ஏற்பட்ட அதிர்வலையில் அதிர்ஷ்டவசமாக அவரது உயிர் திரும்ப வந்துள்ளது.
News March 12, 2026
பாஜகவுடன் அதிமுகவை EPS இணைத்துவிடுவார்: உதயநிதி

வரும் தேர்தலில் பாஜக-அதிமுக அடங்கிய டெல்லி அணியை TN மக்கள் கிளீன் போல்ட் செய்வார்கள் என உதயநிதி கூறியுள்ளார். அரியலூரில் பேசிய அவர், தமிழகத்துக்கான 3,200 கோடி கல்வி நிதி, 100 நாள் வேலை திட்ட நிதியை தராமல் பாஜக அரசு வஞ்சிக்கிறது; இந்த அநியாயத்திற்கு EPS துணை போகிறார் என உதயநிதி குற்றஞ்சாட்டினார். அத்துடன் தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் அதிமுகவை EPS இணைத்துவிடுவார் எனவும் அவர் தெரிவித்தார்.


