News January 1, 2025
தென்மாவட்டங்களில் மீண்டும் வெளுத்து வாங்கிய கனமழை

தென்மாவட்டங்களில் மழை வெளுத்து கட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் ஊத்துவில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதையடுத்து நாலுமுக்கில் 16 சென்டி மீட்டர், காக்காச்சியில் 15 சென்டி மீட்டர், மாஞ்சோலையில் 13 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு, தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி, நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தலா 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
Similar News
News September 14, 2025
கரூர்: இரிடியம் விற்பனை ரூ.65லட்சம் மோசடி

கரூர், வெங்கமேட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஷாஜகான் (65), இவரிடம் இரிடியம் வியாபாரத்தில் அதிக லாபம் தருவதாக ஞானபிரகாசம் ரூ. 65லட்சம் மோசடி செய்துள்ளார். ஞானபிரகாசம் மற்றும் அவரது மனைவிகள் ஜான்சி ராணி (50) அருள் செல்வி (48), திருநெல்வேலியை சேர்ந்த பேச்சிமுத்து (52) ஆகிய 4பேரை சி.பி. சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடல்.
News September 14, 2025
INDvsPAK போட்டியை யாரும் பாக்காதீங்க..

INDvsPAK போட்டி இன்று நடைபெறும் சூழலில், இப்போட்டியை புறக்கணிக்க வேண்டும் என பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவி வலியுறுத்தியுள்ளார். டிவியில் கூட இப்போட்டியை பார்க்காதீர்கள் என கூறிய அவர், BCCI-க்கு கொஞ்சமும் கருணை இல்லை என விமர்சித்தார். மேலும், 1- 2 வீரர்களை தவிர, மற்ற இந்திய வீரர்கள் ஏன் எதுவும் பேசவில்லை என்ற கேள்வியை எழுப்பி, அவர்கள் நாட்டிற்காக நின்றிருக்க வேண்டும் எனவும் கூறினார்.
News September 14, 2025
FLASH: சிக்கன் விலை உயர்ந்தது

நாமக்கல் மண்டலத்தில் சிக்கன் விலை இன்று(செப்.14) கிலோவுக்கு ₹6 அதிகரித்துள்ளது. இதனால், கறிக்கோழி 1 கிலோ ₹121-க்கு விற்பனையாகிறது. நாமக்கல்லில் ஒரு முட்டை 5 ரூபாய் 15 காசுகளுக்கும், சென்னையில் 5 ரூபாய் 70 காசுகளுக்கும் விற்பனையாகிறது. சென்னையில் கறிக்கோழி உயிருடன் 1 கிலோ ₹140-க்கும், தோல் நீக்கிய கறி ₹200-க்கும் விற்பனையாகிறது. உங்கள் ஊரில் ஒரு கிலோ சிக்கன் எவ்வளவு? கமெண்ட்ல சொல்லுங்க.