News November 23, 2024
நாளை கடைசி: வங்கியில் 600 பணியிடங்கள்

பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 600 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ.24) கடைசி தேதியாகும். Apprentices பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: Any UG Degree. வயது வரம்பு: 20-28. சம்பளம்: ₹9,000. தேர்வு முறை: ஆன்லைன் & நேர்முகத் தேர்வு. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
Similar News
News December 5, 2025
தமிழ் சினிமாவின் சிகரம் மறைந்தது.. குவியும் இரங்கல்

அரை நூற்றாண்டுகளாக தமிழ் சினிமாவில் முக்கிய அங்கமாக விளக்கி வந்த <<18470141>>AVM சரவணன்(86)<<>> நேற்று மறைந்தார். நேற்று நேரில் செல்ல முடியாத திரை பிரபலங்கள் பலரும் இன்று அவரது குடும்பத்தினருக்கு சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், எரிமேடையில் AVM சரவணன் உடலை பார்த்தபோது, எனக்கான காசோலையில் கையொப்பமிட்ட கையை பார்த்து கண்ணீர் முட்டியது என கவிஞர் வைரமுத்து வேதனையுடன் X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
News December 5, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்

<<18463810>>திருப்பரங்குன்றத்தில்<<>> தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான சம்பவங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவின் லோக்சபா குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் ராஜ்யசபா குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
News December 5, 2025
ஜெ. ஜெயலலிதா என்னும் ஆளுமை..!!

அம்மா என அதிமுகவினரால் அழைக்கப்படும் ஜெயலலிதா மறைந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனினும், தன்னுடைய மக்கள் பணிகளின் மூலம் அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மாணாக்கருக்கு இலவச லேப்டாப், அம்மா உணவகம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, தாலிக்கு தங்கம், அனைத்து மகளிர் காவல் நிலையம் என அவர் செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம். அவரின் நலதிட்டங்களை நினைவுக்கூர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


