News November 23, 2024
நாளை கடைசி: வங்கியில் 600 பணியிடங்கள்

பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 600 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ.24) கடைசி தேதியாகும். Apprentices பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: Any UG Degree. வயது வரம்பு: 20-28. சம்பளம்: ₹9,000. தேர்வு முறை: ஆன்லைன் & நேர்முகத் தேர்வு. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
Similar News
News December 10, 2025
சட்டம் மக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது: PM மோடி

மக்கள் அன்றாடம் சந்திக்கும் இடர்களை குறைப்பதே சீர்திருத்தம் என PM மோடி கூறியுள்ளார். அரசு திட்டங்களை மக்கள் பெறுவது எளிதாக்கப்பட வேண்டும் என கூறிய அவர், இதற்காக நடைபெறும் நீண்ட Paperwork முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், எந்தவொரு சட்டமும் மக்களுக்கு சுமையாக இருக்க கூடாது எனவும் விதிமுறைகள் எப்போதும் அவர்களின் வசதிக்காகவே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
OPS மகன்கள் அதிமுகவில் இணைகிறார்களா?

OPS மகன்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க மூத்த நிர்வாகிகள் சிலர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனை EPS எதிர்க்கவில்லை என்றாலும், தள்ளிப்போடுகிறார் என விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர். ஒருவேளை மகன்களை சேர்த்துக்கொள்ள EPS தாமதித்தால், தனது ஆதரவாளர்களோடு பாஜக தரும் 5 சீட்களை பெற்றுக்கொண்டு NDA கூட்டணியில் OPS இடம்பெறுவார் என்கின்றனர். இதுபற்றிய Official தகவலுக்கு காத்திருப்போம்.
News December 10, 2025
டைரக்டராக களமிறங்குகிறாரா கீர்த்தி சுரேஷ்?

தனக்கு டைரக்ஷனில் ஆர்வம் இருப்பதாகவும், பல கதைகளை எழுதி வருவதாகவும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சொல்லியிருந்தார். இதையொட்டி சில அசோசியேட் இயக்குநர்களை அழைத்து அவர் கதை விவாதம் நடத்த தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு செட் ஆவதுபோல் ஒரு கதையை அவர் உருவாக்கி வருவதாகவும் பேசப்படுகிறது. கதை முழுமையாக தயாரான உடன் இதுகுறித்த Official தகவல் வெளியாகலாம்.


