News May 14, 2024

நாளை மகளிர் உரிமைத் தொகை ₹1000

image

மகளிர் உரிமைத் தொகை ₹1000 ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த வகையில் நாளை (மே15ஆம் தேதி) இதுவரை மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் மேல்முறையீடு செய்தவர்களுக்கு நாளை ₹1000 வராது. அவர்களுக்கு தேர்தல் முடிந்த பிறகு பணம் செலுத்தப்படும் என தெரிகிறது.

Similar News

News August 24, 2025

சட்டம் அறிவோம்: திடீரென போலீஸ் கைது செய்தால்..

image

வீட்டில் இருக்கும் ஒருவரை புகார் ஒன்றின் பேரில், திடீரென போலீஸ் கைது செய்யும் காட்சிகள் படங்களில் காட்டப்படும். ஆனால், CrPC 41, CrPC 41A பிரிவுகளின் படி, ஒருவரை கைது செய்ய போலீசாரிடம் பிடிவாரண்ட் இருக்க வேண்டியது அவசியமாகும். அதேபோல, பிடிவாரண்டுடன் கைது செய்யப்பட்டாலும், CrPC 21 சட்டத்தின் படி, கைது செய்யப்பட்ட நபர் உடனே ஜாமினுக்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT.

News August 24, 2025

‘அம்மா நான் சாகப்போறேன்.. என் சாவுக்கு 3 பேர் காரணம்’

image

தெலங்கானாவில் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளைஞர் கொடிரெக்கலா சுதீர்(24) தனது கடிதத்தில், ‘நான் சாகப்போகிறேன். எனது சாவுக்கு 3 பேர் காரணம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் சுதீர் தவறான உறவில் இருந்ததாக அவரது கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் வதந்தி பரப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. சோகம்

News August 24, 2025

‘எஞ்சாமி தந்தானே’… ‘இட்லி கடை’ 2-வது பாடல்

image

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் 2-வது பாடல் ‘எஞ்சாமி தந்தானே’ விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கிராமிய குத்து பாடலாக எஞ்சாமி தந்தானேவை உருவாக்கியுள்ளார். சிறுவர்களுடன் தனுஷ் குத்தாட்டம் போடும் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸிற்கு ‘இட்லி கடை’ திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!