News May 18, 2024
அரசு கல்லூரிகளில் சேர நாளை மறுநாளே கடைசி நாள்

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும், கல்லூரிகளில் சேர நாளை மறுநாள் வரை அவகாசம் உள்ளதால், நாளை அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 28, 2025
No Helmet No Petrol… எங்கு தெரியுமா?

‘தலைக்கவசம் உயிர்கவசம்’ என்பதை வலியுறுத்தும் வகையில் உ.பி.யில் புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை ‘ஹெல்மெட் இல்லையெனில் எரிபொருள் இல்லை’ என்ற பிரச்சாரத்தை அம்மாநில அரசு முன்னெடுத்துள்ளது. இது தண்டனை அல்ல, மாறாக வாகன ஓட்டிகளை சட்டத்தை கடைபிடிக்க எடுக்கப்பட்ட முயற்சி என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் ஊருக்கும் இது வேணுமா?
News August 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் ▶குறள் எண்: 441 ▶குறள்: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். ▶ பொருள்: அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
News August 28, 2025
இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குத் தடை? ஃபிஃபா எச்சரிக்கை

அக்டோபர் 30-ம் தேதிக்குள் புதிய விதிகளை அமல்படுத்தவில்லை என்றால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு(AIFF) தடை விதிக்கப்படும் என ஃபிஃபா எச்சரித்துள்ளது. கால்பந்து அமைப்புகள் தன்னிச்சையாக இயங்க வேண்டுமென ஃபிஃபா நினைக்க, இந்திய அரசு அதில் தலையிட நினைப்பதே பிரச்னைக்கு காரணம். ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2036-ல் அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் நிலையில், AIFF-க்கு தடை விதிக்கப்பட்டால் அது பாதிப்பாக அமையும்.