News March 30, 2025

‘PM Internship’ விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

image

‘PM இன்டர்ன்ஷிப்’ திட்டத்தின் 2ஆம் கட்ட பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை(மார்ச் 31) கடைசி நாள் ஆகும். SSLC, ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த 21 – 24 வயது உள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். பயிற்சிக்கு <>pminternship.mca.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ₹5,000 ஊக்கத்தொகை மற்றும் தற்செயலான செலவுகளுக்கு ₹6,000 ஒருமுறை வழங்கப்படுகிறது.

Similar News

News April 1, 2025

பயிற்சியாளருக்காக புதிய அவதாரம் எடுத்த பிரக்…!

image

ஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்கள் செய்யும் சிறுசிறு விஷயங்கள் கூட சோஷியல் மீடியாவில் கவனம் பெறும். அப்படித் தான், தமிழ்நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான பிரக்ஞானந்தா தனது பயிற்சியாளர் ராமச்சந்திரன் ரமேஷுக்கு தோசை சுட்டுக் கொடுத்ததும் வைரலாகியுள்ளது. சோஷியல் மீடியாவில் இதனைப் பகிர்ந்த பயிற்சியாளர், ஒவ்வொரு முயற்சியிலும் பிரக் நன்றாக தோசை சுடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

News April 1, 2025

இந்த கொடூர கொலையே சாட்சி: ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்

image

தி.மலையில் போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில், போதைப்பொருட்கள் இளைஞர்களை எப்படி சீரழிக்கின்றன என்பதற்கு இதுவே சாட்சி என விமர்சித்த அவர், விளம்பர ஷூட்டிங்கில் வந்து ‘போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்’ என்று வசனம் பேசினால் மட்டும் போதாது முதல்வரே, போதைப்பொருள் புழங்குவதை ஒழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News April 1, 2025

மியான்மர் நிலநடுக்க பலி எண்ணிக்கை 2,719ஆக உயர்வு

image

மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை நேரிட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 2,719ஆக உயர்ந்துள்ளது. மேலும் 441 பேரை காணவில்லை. இதேபோல், 4,500க்கும் மேற்பட்டோர் காயத்துடன் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டக்கூடும் என அஞ்சப்படுகிறது.

error: Content is protected !!