News March 16, 2024
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளையே கடைசி நாள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த நிலையில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டியவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News August 27, 2025
மருத்துவமனையில் அமைச்சர்… வெளியானது புதிய தகவல்

அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நிலை குறித்து மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடல் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வயிற்று வலி உள்ளிட்ட சிறு உடல் உபாதைகளுக்காக 2 நாள்களுக்கு முன்பு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில், டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் நலமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
அனைத்து முடிவும்.. ஒரு தொடக்கத்துக்கு தான்!

IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்துள்ள அஸ்வின், அனைத்து முடிவும், புது தொடக்கத்திற்கு தான் என குறிப்பிட்டுள்ளார். மேலும், IPL-ல் இருந்து விடைபெற்றாலும், மற்ற வெளிநாட்டு லீக் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதாக பதிவிட்டுள்ளார். வாய்ப்பளித்த IPL அணிகளுக்கும், BCCI-க்கும் நன்றி சொன்ன அவர், அடுத்து வர இருப்பதை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். உங்களுக்கு பிடிச்ச அஸ்வினின் IPL இன்னிங்ஸ் எது?
News August 27, 2025
அரசியலுக்கு வந்த ஒரே ஆண்டில் பிரதமர் பதவி!

ஐரோப்பிய நாடான லிதுவேனியாவின் புதிய பிரதமராக இங்கா ருகினீனே(44) தேர்வாகியுள்ளது அரசியலில் விநோதமாக பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு பொதுத்தேர்தலுக்கு முன்புதான் அவர், சமூக ஜனநாயக கட்சியில் சேர்ந்தார். பின்னர், MP-யாகி 2024 டிசம்பர் முதல் அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவருக்கு பிரதமர் பதவி தேடி வந்துள்ளது. இவர், அந்நாட்டின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.