News January 1, 2025

SSLC மாணவர்கள் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்

image

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தேர்வெண்ணுடன் கூடிய பட்டியலில் திருத்தம் செய்ய நாளை கடைசி நாளாகும். நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பட்டியல் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுபட்ட மாணவர்கள் சேர்ப்பு, இறப்பு, TC வாங்கிய மாணவர்கள் நீக்கம் ஆகிய பணிகள் தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 18, 2025

இந்திய-வங்கதேச உறவு பாதிக்கப்படாது: ஷேக் ஹசீனா

image

வங்கதேச<<18539019>>பொதுத்தேர்தலில்<<>>, அவாமி லீக் கட்சிக்கு தடை விதித்திருப்பது, ஜனாநாயகத்தை கேலியாக்குவது போன்றது என அக்கட்சி தலைவர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் நேர்மையானதாக இருக்காது என குற்றஞ்சாட்டிய அவர், தடை செய்தாலும் கட்சியை அழிக்க முடியாது என்று கூறியுள்ளார். வரலாறு, கலாசாரத்தால் பிணைக்கப்பட்ட <<18591819>>இந்திய-வங்கதேச உறவு<<>> சிலரின் இடைபட்ட செயல்பாட்டால் பாதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 18, 2025

வீரர்கள் Safe.. மக்களின் துயரம் தீருமா?

image

வட மாநிலங்களில் காற்று மாசு காரணமாக, மக்கள் சுவாசிக்கவே அவதிப்பட்டு வருகிறார்கள். இதன் உச்சமாக, லக்னோவில் நடைபெறவிருந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா T20I போட்டியும் <<18595035>>ரத்தானது<<>>. காற்றின் தரம், அதாவது AQI கிட்டத்தட்ட 490-ஐ நெருங்கியதால், போட்டி கைவிடப்பட்டுள்ளது. இனியாவது மக்கள் பாடும் துயரை அறிந்து அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ளன. இதற்கு என்னதான் தீர்வு?

News December 18, 2025

பட்டா தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

image

குறிப்பிட்ட நிலம், வீடு, வீட்டுமனை ஒருவருக்கு சொந்தமானது என்பதற்கான அரசு ஆவணமே பட்டா. அது தொலைந்து விட்டால், முதலில் தாசில்தாரிடம் புகார் அளிக்க வேண்டும். பின்னர் நகல் பட்டா பெறுவதற்கான விண்ணப்பத்தில் பட்டா எண், அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்து தாசில்தார் ஆபிசில் சமர்பிக்க வேண்டும். அது, VAO & வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பப்படும். விசாரணைக்கு பிறகு, ஒப்புதல் பெறப்பட்டு, நகல் பட்டா அளிக்கப்படும்.

error: Content is protected !!