News January 1, 2025
SSLC மாணவர்கள் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தேர்வெண்ணுடன் கூடிய பட்டியலில் திருத்தம் செய்ய நாளை கடைசி நாளாகும். நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பட்டியல் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுபட்ட மாணவர்கள் சேர்ப்பு, இறப்பு, TC வாங்கிய மாணவர்கள் நீக்கம் ஆகிய பணிகள் தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 2, 2025
ஒரே மேடையில் 234 தொகுதி வேட்பாளர்கள்: சீமான்

சட்டமன்றத் தேர்தலையொட்டி, வரும் பிப்ரவரி 21-ம் தேதி நாதக சார்பில் ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ திருச்சியில் நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார். கூட்டணி வைக்காமல், 2026 சட்டமன்றத் தேர்தலில் நாதக தனித்து களம் காண்கிறது. இந்த மாநாட்டில் நாதக சார்பில் போட்டியிடவிருக்கும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வும் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
News December 2, 2025
கம்பேக் கொடுக்கும் ஹர்திக் பாண்ட்யா!

ஆசிய கோப்பையில் காயம் அடைந்த ஹர்திக், கடந்த சில மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார். BCCI-ன் சிறப்பு மையத்தில்(COE) சிகிச்சை எடுத்து கொண்ட அவர், T20-ல் விளையாட முழு உடற்தகுதி பெற்றுள்ளாராம். எனவே, பரோடா அணிக்காக சையது முஷ்டாக் தொடரில் விளையாடவுள்ளார். இதனை தொடர்ந்து, வரும் 9-ம் தேதி தொடங்கும் SA-வுக்கு எதிரான T20 தொடரிலும் ஹர்திக் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 2, 2025
பிரபல நடிகர் காலமானார்.. மனைவி உருக்கம்

நடிகர் தர்மேந்திராவின் இறுதிச்சடங்கை அவசரமாக முடித்ததற்கான காரணத்தை ஹேமமாலினி விளக்கியுள்ளார். நோய்வாய்ப்பட்ட நிலையில் தன்னை யாரும் பார்க்க கூடாது என்று எப்போதுமே தர்மேந்திரா எண்ணியதாகவும், தனது கஷ்டங்களை நெருக்கமானவர்களிடம் இருந்து கூட அவர் மறைத்தார் எனவும் ஹேமமாலினி உருக்கமாக தெரிவித்துள்ளார். ஒருவரின் மறைவுக்கு பிறகு நடப்பவை அனைத்தும் குடும்பத்தினர் எடுக்கும் முடிவுகள் என்றும் கூறியுள்ளார்.


