News January 1, 2025

SSLC மாணவர்கள் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்

image

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தேர்வெண்ணுடன் கூடிய பட்டியலில் திருத்தம் செய்ய நாளை கடைசி நாளாகும். நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பட்டியல் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுபட்ட மாணவர்கள் சேர்ப்பு, இறப்பு, TC வாங்கிய மாணவர்கள் நீக்கம் ஆகிய பணிகள் தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 17, 2025

இருமொழிக் கொள்கையில் திமுக அரசு வெளி வேஷம்: EPS

image

நவோதயா பள்ளி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக EPS சாடியுள்ளார். TN-ல் நவோதயா பள்ளிகள் அமைக்க உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டின் ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை SC கடந்த 15-ம் தேதி தள்ளுபடி செய்தது. இவ்வழக்கில் முறையாக வாதிடாமல் TN அரசு கோட்டை விட்டதாக EPS அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், இருமொழி கொள்கையில் பொம்மை முதல்வரின் குட்டு மக்களுக்கு புரிந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

News December 17, 2025

ரேஷன் கடையில் புதிய பொருள்.. அமைச்சர் அறிவிப்பு

image

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட வேண்டுமென்பது நீண்ட நாள்களாகவே தென்னை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், இத்திட்டம் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அத்துடன், அரை லிட்டருக்கான தொகையில் பாதியை மானியமாக வழங்கி, மீதியை விலையாக நிர்ணயிக்கலாம் என்று ஆலோசிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 17, 2025

மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. NEW UPDATE

image

நிச்சயமாக மகளிர் உரிமைத்தொகை உயரும் என CM ஸ்டாலின் ஒன்றுக்கு 2 முறை கூறியதில் இருந்தே, <<18565227>>₹2,000<<>> வரை உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், முதியோர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தியது போல, மகளிர் உரிமைத்தொகையும் சில நூறுகள் உயர்த்தப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!