News August 14, 2024
நாளை சுதந்திர தினம்.. இன்று ராணுவ கேப்டன் வீரமரணம்

சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீவிரவாதிகளால் ராணுவ கேப்டன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் நேற்று இரவு ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் கேப்டன் தீபக் சிங் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
Similar News
News December 5, 2025
BREAKING: விமான டிக்கெட் விலை விறுவிறுவென உயர்ந்தது

இண்டிகோ ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான டிக்கெட் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை – பெங்களூரு ₹3,129 என இருந்த டிக்கெட் விலை ₹20,599, ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னை – திருச்சி ₹3,129 to ₹14,961, சென்னை – திருவனந்தபுரம் ₹6,805 to ₹34,403, சென்னை – மும்பை ₹5,980 to ₹42,448, சென்னை – டெல்லி ₹7,746 to ₹32,782 வரை உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News December 5, 2025
கூடங்குளம் அணுமின் நிலையம்: புடின் நம்பிக்கை

கூடங்குளத்தில் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை உருவாக்க இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்து வருவதாக அதிபர் புடின் தெரிவித்துள்ளார். அங்குள்ள 6 அணு உலைகளில் 3 உலைகள் இந்தியாவின் எரிசக்தி வலையமைப்புடன் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது, மலிவான, சுத்தமான மின்சாரம் கிடைக்கும் என்றும் கூறினார்.
News December 5, 2025
சிறுபான்மையினரை தாஜா செய்யும் திமுக: அண்ணாமலை

திருப்பரங்குன்றத்தில் மோசடியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்ற இஸ்லாமியர்களே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் சிறுபான்மையினரை தாஜா செய்வதற்காக திமுக அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் 161 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


