News August 6, 2024
சேலம், விருதுநகரில் நாளை உள்ளூர் விடுமுறை

சேலத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில், ஆடி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் பிரபலம். இதையொட்டி சேலம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஆக.31 வேலைநாள். இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் நாளை நடைபெறுவதால், விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஆக.17 வேலைநாள்.
Similar News
News December 28, 2025
‘நான் இன்னும் உயிரோடு தான் இருக்கேன்’

சாதாரண பூனைகளை போலல்லாமல், தட்டையான தலை, தண்ணீரில் மீன் பிடிக்கும் அசாத்திய திறமை கொண்ட பூனை இனம் Flat-headed cats. சுமார் 30 ஆண்டுகளாக மனிதர்களின் கண்களில் படாமல் இருந்ததால் அழிந்து விட்டதாக கருதப்பட்டது. இந்நிலையில், ‘நான் இன்னும் இருக்கிறேன்’ என்பது போல, மீண்டும் தன்னை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் தெற்கு பதியில் உள்ள அடர்ந்த சதுப்பு நிலக்காடுகளில் இவை தற்போது தென்பட்டுள்ளன.
News December 28, 2025
நகை கடன்.. முக்கிய அறிவிப்பு

<<18646177>>நகை கடன்<<>> பெறுபவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வங்கிகளுக்கு புதிய அறிவுறுத்தல்களை RBI வழங்கியுள்ளது. இனி நகையை அடகு வைத்து கடன் பெறுவோருக்கு குறைவான தொகையே கிடைக்கும். அதாவது, முன்பு ₹1 லட்சம் மதிப்புள்ள நகைகளுக்கு ₹72,000 வரை கடன் பெறலாம். தற்போது, அந்த மதிப்பு ₹60,000 – ₹65,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தங்கம் விலையில் ஏற்படும் நிலையில்லா மாற்றமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. SHARE IT.
News December 28, 2025
சொகுசு கப்பலில் தவிக்கும் 123 பேர்!

பப்புவா நியூ கினியில் உள்ள பாறையில் மோதி தரைதட்டிய ஆஸி. சொகுசு கப்பல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கெயின்ஸிலிருந்து டிச.18 அன்று புறப்பட்ட அந்த கப்பலில் 80 பயணிகள், 43 ஊழியர்கள் உட்பட 123 பேர் உள்ளனர். வரும் டிச.30 உடன் பயணம் முடிவடைய இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதே கப்பலில் கடந்த அக்டோபரில் பயணித்த 80 வயது மூதாட்டி மரணமடைந்தது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.


