News March 16, 2025

நாளை நல்ல நாள்.. பத்திரப்பதிவு செய்யுங்க

image

பங்குனி மாதத்தின் மங்களகரமான தினமான மார்ச் 17ம் தேதி அதிகளவில் பத்திர பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நாளை ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 300 டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் அலுவலகங்களுக்கு 150 சாதாரண டோக்கன்களும் வழங்கப்படுகிறது.

Similar News

News March 16, 2025

மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் டிஸ்சார்ஜ்

image

திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். முதலில் நெஞ்சு வலி என தகவல் பரவிய நிலையில், நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ரகுமானின் மகன் அமீன் விளக்கமளித்துள்ளார். வழக்கமான பரிசோதனைகள் முடிந்த பின் அவர் வீடு திரும்பினார்.

News March 16, 2025

திருமணத்திற்கு முன் குழந்தை! தாய் பால் இல்லாமல் மரணம்

image

கோவை அரசு ஹாஸ்பிடலில் திருமணம் ஆகாத இளம் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. திருமணமாகாமல் குழந்தை பிறந்ததால், வெளியே தெரிந்தால் அவமானம் என நினைத்த அப்பெண், ஹாஸ்பிடல் காவலாளியை அணுகியுள்ளார். அவர், தனக்கு தெரிந்த தம்பதிக்கு தத்து கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்பெண்ணும் சம்மதித்து, அவரிடமே குழந்தையை கொடுத்துவிட்டு ஊருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், அக்குழந்தை தாய்பால் இல்லாமல் உயிரிழந்துள்ளது.

News March 16, 2025

முறைகேடு விசாரணை உறவுக்காரர்கள் கையில்: விஜய்

image

<<15777897>>டாஸ்மாக் <<>>முறைகேடு தொடர்பான விசாரணை நியாயமாக நடக்குமா என்பது, மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும் (பாஜக), இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் (திமுக) மட்டுமே வெளிச்சம் என்று விஜய் விமர்சித்துள்ளார். முறைகேடு மூலம் ஈட்டப்பட்ட பணம்தான் 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற சூளுரையின் பின்னணி என சாடிய அவர், எத்தனை கோடிகளை கொட்டினாலும் திமுகவை 2026இல் மக்கள் ஒதுக்கித் தள்ளுவார்கள் என்றார்.

error: Content is protected !!