News October 4, 2024
ஒரே வாரத்தில் தக்காளி விலை டபுள்!

தக்காளி விலை ஒரே வாரத்தில் டபுள் ஆனதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ₹35 வரை விற்பனையானது. ஆனால், இன்று ஒரு கிலோ ₹65 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விலையில் கடந்த வாரம் ₹50க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ₹80 – ₹90 வரை விற்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 20, 2025
திமுகவுக்கு வலிமை கிடையாது: விஜயபாஸ்கர் விமர்சனம்

திமுகவுக்கு தனித்து எந்த வலிமையும் இல்லை; கூட்டணி கட்சிகளால்தான் பலமாக இருப்பதாக EX மினிஸ்டர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார். MGR, ஜெ.,வுக்கு பிறகு அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை EPS வலிமையுடன் வழிநடத்தி வருகிறார் எனக் கூறிய அவர், தற்போது DMK அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இதனால், 2026-ல் கட்டாயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்; ADMK கூடுதல் பலத்துடன் களத்தில் நின்று வெற்றிபெறும் என தெரிவித்தார்.
News August 20, 2025
ஜெய்ஸ்வால் Vs சுப்மன் கில் : யார் சிறந்த டி20 வீரர்

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான ஜெய்ஸ்வாலை ஆசிய கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 23 டி20 போட்டிகளில் 164 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 5 அரைசதம், 1 சதம் உட்பட 723 ரன் அடித்துள்ளார். சுப்மன் கில் 21 போட்டிகளில் 139 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 3 அரைசதம், 1 சதம் உட்பட 578 ரன் அடித்துள்ளார். ஜெய்ஸ்வாலை விட குறைவான ஸ்ட்ரைக் ரேட் கொண்ட கில் எப்படி தேர்வானார் ?
News August 20, 2025
121 கிலோ தங்கம்… கடவுளுக்கு காணிக்கை கொடுத்த பக்தர்

திருப்பதி ஏழுமலையானுக்கு ₹140 கோடி மதிப்பு கொண்ட 121 கிலோ தங்கத்தை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். ஏழுமலையானை வேண்டிக் கொண்டு தொழில் தொடங்கிய இவர், கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துள்ளார். இதையடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக, 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக கொடுத்திருக்கிறார். பெயர் சொல்ல விரும்பாத அந்த பக்தருக்கு சொந்தமான நிறுவனத்தின் 60% பங்குகள் மட்டும் ரூ.6,000 கோடியாம்.