News March 31, 2024
நள்ளிரவு முதல் சுங்கச் சாவடி கட்டணம் உயர்கிறது

தமிழகத்தில் உள்ள 29 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் (ஏப்.1) புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் சுங்கச் சாவடிகளில் அவ்வப்போது சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சில முக்கிய சுங்கச் சாவடிகளில் நாளை முதல் ₹5-₹20 வரை கட்டண உயர உள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயரும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 19, 2025
குருப்பெயர்ச்சி: 6 ராசியினர் மிகுந்த கவனம் தேவை

குரு பகவான் விரைவில் ரிஷப ராசியில் உள்ள மிருகசீரிஷம் நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, மிதுன ராசியில் உள்ள மிருகசீரிஷம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார். ஆதலால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ராசியினர் மிகுந்த கவனமாக இருக்க ஜோதிட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சிலர் முதுகில் குத்தவும், பணப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக ஜோதிடர்கள் குறிப்பிட்டுள்ளனர். SHARE IT.
News April 19, 2025
கைதான கொஞ்ச நேரத்திலேயே நடிகருக்கு ஜாமின்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, நடிகர் <<16150071>>ஷைன் டாம் சாக்கோ<<>>விற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மெடிக்கல் டெஸ்ட் உள்ளிட்ட அடுத்தகட்ட நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என கொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் அவர் கைதாவது இது 2-வது முறையாகும். கடந்த 2015-ம் ஆண்டும் இதேபோன்ற ஒரு வழக்கில் அவர் 2 மாதம் சிறையில் இருந்தார்.
News April 19, 2025
இளைஞரை நிர்வாணப்படுத்தி வண்டியில் கட்டி சித்ரவதை

உ.பி.யில் இளைஞரை நிர்வாணப்படுத்தி மாட்டு வண்டியில் கட்டி இழுத்து சென்று கிராம மக்கள் சித்ரவதை செய்துள்ளனர். விஷேஷ்வர்கஞ்சில் 22 வயது இளைஞர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பிடித்து சென்ற மக்கள், ஆடையை களைந்து நிர்வாணப்படுத்தி வண்டியில் கட்டி இழுத்து சென்றனர். அப்போது அவரை சிலர் கடுமையாகத் தாக்கினர். அவரின் சகோதரி அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.