News April 18, 2024

வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும்

image

வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர், 12 ஆவணங்களில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என்றும், தேர்தல் ஆணையத்தின் செயலி மூலமாக, வாக்குப்பதிவு மையத்தை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

Similar News

News January 19, 2026

பட்டாவில் மாற்றம் செய்யணுமா?

image

நிலப் பட்டாவில் பிழைகளை திருத்த இனி இ-சேவை இணையதளம் மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். அதில் “Patta Chitta” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து விண்ணப்பப் படிவத்தில் உங்கள் பட்டாவில் உள்ள பிழையான விவரத்தையும், அதற்கான சரியான விவரத்தையும் குறிப்பிட்டு ஆதார ஆவணங்களை இணைக்கவும். அதை பெற்றவுடன் VAO, சர்வேயர் அல்லது RI(Revenue Inspector) நேரில் ஆய்வுசெய்து திருத்தங்கள் செய்து அதற்கான உத்தரவை வழங்குவார்கள்.

News January 19, 2026

BREAKING: விஜய் அடுத்த அதிரடி

image

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசத்தை மேலும் 20 நாள்கள் நீட்டிக்கக்கோரி, விஜய் உத்தரவின்பேரில் தவெக தரப்பில் SC-ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.18-ம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில், வரும் 30-ம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்தது. இந்நிலையில், பொங்கல் விடுமுறையை சுட்டிக்காட்டி, அவகாசத்தை நீட்டிக்க தவெக வலியுறுத்தியுள்ளது.

News January 19, 2026

வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது தெரியுமா?

image

விண்வெளி கருப்பாக இருக்கும்போது வானம் மட்டும் எப்படி நீல நிறத்தில் உள்ளது என என்றாவது யோசிச்சிருக்கீங்களா? உண்மையில், சூரிய ஒளி வளிமண்டலத்திற்குள் நுழையும்போது பல நிறங்களை வெளியிடுகிறது. ஆனால், பிற நிறங்களை விட நீலம் & ஊதா போன்ற நிறக்கீற்றுகள் குறுகிய அலையை கொண்டுள்ளதால், அது அதிகமாக சிதறி வானம் முழுவதும் படருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதனால்தான் வானம் நீல நிறத்தில் தெரிகிறது. SHARE.

error: Content is protected !!