News May 20, 2024
இன்று களம் காணும் நட்சத்திர வேட்பாளர்கள்

மக்களவைத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி களம் காண்கிறார். அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, லக்னோவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மும்பை வடக்கில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, பிஹாரின் ஹாஜிபூரில் LJP சார்பில் சிராக் பாஸ்வான் களம் காண்கின்றனர்.
Similar News
News March 4, 2026
கிளம்பினார் விஜய்

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து விஜய் சற்றுமுன் புறப்பட்டார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர், அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கிடையில், தவெக கூட்டத்தில் பங்கேற்க காலையில் இருந்து தவெகவினர் குவியத் தொடங்கியுள்ளனர்.
News March 4, 2026
நாட்டின் பணக்கார மாவட்டங்களின் டாப் 5 லிஸ்ட்!

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் நாட்டில் பணக்கார மாவட்டம் எது என்ற பட்டியல் வெளிவந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தின் வரையிலான கணக்கீடாகும். இதில் எந்தெந்த மாவட்டங்கள் டாப்பில் இருக்கின்றன என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்யவும். நீங்க மட்டும் இந்த தகவலை தெரிஞ்சிக்காம, நண்பர்களுக்கும் அதிகளவில் ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
கூட்டணி முடிவு… பின்வாங்கினார்

தனிநபர்களுக்கு இடையே வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கட்சி என்பது அனைவரை விடவும் பெரியது என மாணிக்கம் தாகூர் எக்ஸ்-ல் பதிவிட்டுள்ளார். கூட்டணி விவகாரத்தில் தலைமை எந்த முடிவு எடுத்தாலும், அதை ஒழுக்கத்துடன் ஏற்றுக்கொள்வேன் என்ற அவர், ஒற்றுமை மிகப்பெரிய பலம் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், இதுவரை திமுகவை சீண்டி வந்த மாணிக்கம் தாகூர் தற்போது பின்வாங்கியிருப்பது ஏன் என கேள்வி எழுப்பிவருகின்றனர்.


