News March 14, 2025
இன்றைய பொன்மொழிகள்!

▶விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை. ▶கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான மரண போராட்டம் தான் புரட்சி. ▶உன்னை அதிகம் விமர்சிப்பவனே உன்னை கண்டு அதிகம் பயப்படுகிறான். ▶ஒரு புரட்சியாளன் என்பவன் தனது இலட்சியத்தை ஒளிவு மறைவின்றி தனது பகைவர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். ▶தடம் பார்த்து நடப்பவன் மனிதன்; தடம் பதித்து நடப்பவன் புரட்சியாளன்.
– பிடல் காஸ்ட்ரோ.
Similar News
News March 14, 2025
போலித்தனமான பட்ஜெட்: விஜய் அட்டாக்

தமிழக அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டை விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் யாவும் போலித்தனமாக இருப்பதாகவும், அவை எல்லாம் நடைமுறைக்கு வருமா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கேஸ் மானியம் என்னவானது? ரேஷனில் கூடுதல் சர்க்கரை அறிவிப்பு என்னவானது? பழைய ஓய்வூதியத் திட்டம் என்னவானது என விஜய் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பியுள்ளார்.
News March 14, 2025
எப்போதும் உன்னுடன் இருப்பேன் – KL ராகுல்

IPL தொடரில் டெல்லி கேப்டன் யார் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துள்ளது. அக்சர் படேலை கேப்டனாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அக்சர் படேலுக்கு, KL ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘வாழ்த்துகள் பப்பு. புதிய பயணம் சிறப்பாக அமைய எப்போதும் உன்னுடன் இருப்பேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கேப்டன் பதவியில் தனக்கு விருப்பமில்லை என KL ராகுல் கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது.
News March 14, 2025
‘டாஸ்மாக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை’

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். டாஸ்மாக் டெண்டரில் எந்த ஊழலும், முறைகேடும் நடைபெறவில்லை. தமிழக அரசுக்கு எதிராக ED-ஐ மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஏவியுள்ளது. எந்தக் குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.