News June 26, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்தது. *6ஆம் வகுப்பு முதல் AI மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். *ரத்த சொந்தங்கள், உறவினர்கள் தவிர 3ஆம் நபருக்கு டிக்கெட் புக் செய்து கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ₹10,000 அபராதம் விதிக்கும் வகையில் ரயில்வே சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

Similar News

News October 14, 2025

BREAKING: திமுக அமைச்சருடன் இபிஎஸ் சந்திப்பு

image

சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் துரைமுருகனை சந்தித்து இபிஎஸ், உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கடந்த மாதம் திடீரென மயங்கி விழுந்த துரைமுருகன், கையில் காயம் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் அரசியல் களத்தில் இரு கட்சிகளும் எதிர் துருவங்களாக பயணம் செய்தாலும், திமுகவின் மூத்த தலைவரான துரைமுருகனை, EPS சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தது ஆரோக்கியமான அரசியலாக பார்க்கப்படுகிறது.

News October 14, 2025

எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

image

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்றிரவு 7 மணி அளவில் ஜம்மு காஷ்மீர், மச்சில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஊடுருவலை முறியடித்தனர். பனிப்பொழிவை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்பதால் எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News October 14, 2025

பினராயி மகன் மீது நடவடிக்கை எடுக்க காங்., கடிதம்

image

பண முறைகேடு வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மகன் விவேக் கிரண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ED-க்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. 2023-ல் விவேக் கிரண் மீது பண மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால், இதுதொடர்பான விசாரணைக்கு அவர் இதுவரை ஆஜராகவில்லை. இந்நிலையில், வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று காங்., கோரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!