News June 26, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

*கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்தது. *6ஆம் வகுப்பு முதல் AI மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். *ரத்த சொந்தங்கள், உறவினர்கள் தவிர 3ஆம் நபருக்கு டிக்கெட் புக் செய்து கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ₹10,000 அபராதம் விதிக்கும் வகையில் ரயில்வே சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
புஜாராவின் மைத்துனன் தற்கொலை

ராஜ்கோட்டில், கிரிக்கெட் வீரர் புஜாராவின் மைத்துனன் ஜீத் பபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் தான், Ex-Fiance கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்றிலிருந்து ஜீத் பபாரி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில், மீள்வதற்கு வழிதெரியாமல் தான் இந்த விபரீத முடிவை எடுத்தாரா என போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
News November 26, 2025
பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி

அயோத்தி ராமர் கோயிலில் தர்மக்கொடி ஏற்றியதை, பாபர் மசூதி இடிப்பு மற்றும் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு என குறிப்பிட்டு பாக்., விமர்சித்து இருந்தது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, மதவெறி மற்றும் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளில் ஊறிப்போன பாக்., எங்களுக்கு உபதேசம் செய்ய தேவை இல்லை என தெரிவித்துள்ளது. மேலும், சொந்த நாட்டின் மனித உரிமை பிரச்னைகளில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
News November 26, 2025
கனவில் பாம்பு வருதா? இதுதான் அர்த்தம்

சிலருக்கு பாம்பு அடிக்கடி கனவில் வந்து கொண்டே இருக்கும். இதற்கு அர்த்தம் இருப்பதாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. ராகு தசை, கேது தசை நடக்கும்போது, அப்படி கனவு வருமாம். ஒற்றை நல்ல பாம்பை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்புகளை கண்டால் நன்மைகள் நடக்கும். பாம்பு கடித்துவிட்டதாக கனவு வந்தால் பணம் கொட்டுமாம். உங்க கனவுல பாம்பு வந்திருக்கா?


