News October 21, 2024

இன்றே கடைசி: 10th முடித்தவர்களுக்கு வேலை

image

NABARD வங்கியில் குரூப் சி பிரிவில் காலியாக உள்ள 108 அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.21) கடைசி நாளாகும். இதற்கு பத்தாம் வகுப்பு முடித்த 18 – 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஊதியமாக மாதம் ₹35,000 வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் தகவல்களுக்கு <>www.nabard.org<<>> என்ற இணையதளத்தை அணுகவும்.

Similar News

News August 22, 2025

அரசியல் கூட்டம் அல்ல, நடிகரை பார்க்க வந்த கூட்டம்: தமிழிசை

image

TVKவின் 2-வது மாநில மாநாட்டில் விஜய் பேசுகையில், கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக எனவும் தெரிவித்தார். இதுபற்றி பேசிய தமிழிசை, விஜய்யின் மாநாடு அரசியல் கூட்டம் போல் இல்லை என்றும், ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்டம் போல் உள்ளதாகவும் கூறினார். கொள்கை எதிரி பாஜக என்று கூறும் விஜய், தனது கொள்கையை கூறவில்லை என்றும், பாஜகவை விமர்சிக்கும் விஜய் காங்கிரஸை விமர்சிக்காதது ஏன் எனவும் கேட்டார்.

News August 22, 2025

அதிக வயதில் கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர்கள்

image

கிரிக்கெட்டில் வருடந்தோறும் எத்தனையோ இளம் வீரர்கள் அறிமுகமானாலும், சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக பல வருடங்கள் காத்திருந்து சில வீரர்களும் விளையாடி உள்ளனர். அப்படி அறிமுகமான வீரர்களின் புகைப்படங்களை மேலே கொடுத்துள்ளோம். அதனை Swipe செய்து பார்க்கவும்.

News August 22, 2025

ரேஷன் கார்டில் இனி பொருள்கள் வாங்க முடியாதா?

image

ஏழைகளுக்கு மானிய விலை உணவு தானியத்துடன், 5 கிலோ இலவச தானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வசதியான பலரும் இச்சலுகை பெறும் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். இதனை கண்டறிந்து நீக்கும் வகையில், வருமானவரி செலுத்துபவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட வசதியானோரின் பெயர்களை கண்டறிந்து நீக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பலரின் ரேஷன் கார்டுகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

error: Content is protected !!