News October 21, 2024
இன்றே கடைசி: 10th முடித்தவர்களுக்கு வேலை

NABARD வங்கியில் குரூப் சி பிரிவில் காலியாக உள்ள 108 அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.21) கடைசி நாளாகும். இதற்கு பத்தாம் வகுப்பு முடித்த 18 – 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஊதியமாக மாதம் ₹35,000 வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் தகவல்களுக்கு <
Similar News
News July 6, 2025
7 மாவட்டங்களில் மழை வெளுக்கப் போகுது: IMD

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?
News July 6, 2025
மனைவிக்கு தினமும் முத்தம் கொடுத்தா…

தினமும் வேலைக்கு போகும்போது, உங்கள் மனைவிக்கு முத்தம் கொடுப்பீர்களா? அப்படி முத்தம் கொடுத்துவிட்டுப் போகும் கணவன்மார்கள், முத்தம் கொடுக்கும் பழக்கம் இல்லாத கணவர்களை விட நீண்ட ஆயுளுடன் (சராசரியாக 5 ஆண்டுகள் கூடுதலாக) மகிழ்ச்சியாக வாழ்வதாக ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. முத்தமிடுவது நெருக்கத்தையும், நம்பிக்கையையும் அதிகப்படுத்துவதே இதற்கு காரணமாம். நீங்கள் எப்படி?
News July 6, 2025
2026 சட்டமன்றத் தேர்தலில் பின்வாங்குகிறதா பாஜக?

நமது இலக்கு 2026 தேர்தல் அல்ல; 2029 லோக்சபா தேர்தல் என நயினார் கூறியுள்ளார். சென்னையில் நடந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், 2026 தேர்தலுக்கான வியூகத்தை அமித்ஷா பார்த்து கொள்வார் எனவும் 2029 தேர்தலில் அதிக MPக்களை பார்லிமென்ட்டுக்கு அனுப்புவதே நமது இலக்கு என்றார். நயினாரின் இந்த பேச்சு, அதிமுகவின் நிபந்தனைகளுக்கு பாஜக பச்சைக்கொடி கட்டுவதையே உணர்த்துவதாக பேசப்படுகிறது.