News October 10, 2024
இன்று உலக மனநல தினம்

ஆண்டுதோறும் அக்டோபர் 10இல், உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “நல்ல மனநிலையில் உள்ளவர், தன் முழு ஆற்றலையும் உணர்ந்து, தினசரிப் பிரச்னைகளை சமாளித்து, உழைத்து, தான் வாழும் சமுதாயத்தில் முக்கியப் பங்களித்து, தனது வாழ்வை முழுவதுமாக வாழத் தெரிந்தவராக இருப்பார்” எனக் கூறப்பட்டுள்ளது. நீங்க எப்படி? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News August 16, 2025
பிரிவினை பற்றிய பாடம்.. தேசிய அரசியலில் கொதிநிலை

6 – 12ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் நாட்டு பிரிவினை பற்றிய புது தொகுதியை NCERT அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் பிரிவினை கலவரங்களுக்கு ஜின்னா, காங்., மவுண்ட்பேட்டன் மூவரும் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டை பிரிக்க வேண்டும் என 1938-ல் ஹிந்து மகாசபா தான் முதலில் வலியுறுத்தியதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பொய் தகவலை கூறும் இப்புத்தகங்களை கொளுத்த வேண்டும் என்றும் சாடியுள்ளது.
News August 16, 2025
இதுக்கு பதில் சொல்லுங்க பாப்போம்!

ரொம்ப நேரம் நியூஸ் படிச்சி டயர்டான உங்க மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுப்போம் வாங்க. மேலே உள்ள படத்தை பாருங்க. 6-க்கும், 3-க்கும் இடையில் என்ன நம்பர் வரும் என்று கரெக்ட்டா சொல்லுங்க. பாக்க கஷ்டமா இருந்தாலும், இது ரொம்ப ஈசி. மற்ற நம்பர்களை பாருங்க. உங்களுக்கு பதில் தெரியும். பார்ப்போம் எத்தனை பேர் கரெக்ட்டா பதில் சொல்றீங்க என.
News August 16, 2025
அமலாக்கத்துறையிடம் ஐ.பி., சொன்ன விஷயம்..

திமுகவின் சீனியர் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் காலை முதல் ED ரெய்டு நடந்து வருகிறது. வீட்டிற்கு வந்த அதிகாரிகளிடம் ஐ.பி., பேசிய விஷயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ”இந்த ரெய்டு எதிர்பார்த்ததுதான். தென்மண்டலத்தில் திமுக வலிமையாக இருக்கிறது. தேர்தல் வேலையை முடக்கவே இந்த ரெய்டு. முடங்கி போகமாட்டேன். என்ன செய்யணுமோ செய்யுங்க” என அதிகாரிகளிடம் ஐ.பி., கூறியுள்ளதாக தகவல்.