News April 7, 2025
வரலாற்றில் மோசமான நாள் இன்று

இந்திய பங்குச்சந்தைகள் இன்று வரலாற்றில் மிக மோசமான சரிவை கண்டிருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, நிஃப்டி 886 புள்ளிகளை (3.87%) இழந்துள்ளது. இதற்கு முன், 2020 மார்ச் மாதம் கோவிட் அச்சத்தால் நிஃப்டி ஒரே நாளில் 1,135 (12.98%) புள்ளிகளை இழந்தது. 2008ஆம் ஆண்டு 8.7%, 2015ஆம் ஆண்டு 5.92%, 2022ஆம் ஆண்டு 4.75% என நிஃப்டி அதீத இழப்புகளை சந்தித்திருக்கிறது. உங்களது போர்ட்ஃபோலியோ எப்படி இருக்கிறது?
Similar News
News December 4, 2025
தோல்விக்கான காரணங்களை அடுக்கிய கே.எல்.ராகுல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ODI-ல் தோற்றதற்கு டாஸும் ஒரு முக்கிய காரணம் என்று கேப்டன் கே.எல்.ராகுல் கூறியுள்ளார். ஏனெனில், 2-வது இன்னிங்ஸில் பனிப்பொழிவின் காரணமாக பந்துவீசுவது மிகவும் கடினமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றும், பேட்டிங்கின் போது 20-25 ரன்கள் கூடுதலாக அடித்திருக்கலாம் எனவும் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.
News December 4, 2025
திருப்பரங்குன்றம்.. திமுக அரசை சாடிய அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விஷயத்தில், கோர்ட் உத்தரவுகளை எல்லாம் ஒன்றுமில்லை என திமுக அரசு நினைக்கிறதா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் நூற்றுக்கணக்கான போலீஸை குவித்து, பக்தர்கள் மதச்சடங்கு செய்வதை திமுக அரசு தடுத்து நிறுத்தியுள்ளதாக அவர் சாடியுள்ளார். மேலும், தமிழகத்தில் சனாதன தர்மத்தை தனிமைப்படுத்துவதற்கான காரணத்தை திமுக அரசு கூறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நியமித்துள்ளார். CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியாக கலால் துறையின் சேப்பாக்கம் பகுதியின் இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். EPS-ன் எடப்பாடி தொகுதிக்கு சேலம் கலால் துறையின் உதவி ஆணையர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


